கவனிக்க வேண்டிய 7 வகை மனிதர்கள்

 கவனிக்க வேண்டிய 7 வகை மனிதர்கள்

 மனிதர்களுக்கு மிகவும் வளர்ச்சியடைந்த மூளை உண்டு. இது, பண்பியல், பகுப்பாய்வு  (abstract reasoning), மொழி (Language), உண்முக ஆய்வு , பிரச்சனைகளைத் தீர்த்தல் (Problem Solving), உணர்வுகள்  போன்றவற்றைக் கையாளக்கூடிய வல்லமை கொண்டது. இத்தகைய வல்லமை கொண்ட மூளையும், நிமிர்ந்த உடலும் மனித வளர்ச்சிக்கு முக்கியக் காரணங்களாக அமைந்தன.

மனிதர்கள்  தங்கள் எண்ணங்களை வெளிப்படுத்துவதற்கும், தங்களை ஒழுங்கமைத்துக் கொள்ளல் என்பவற்றுக்காகவும் தொடர்பு முறைகளைப் பயன்படுத்துகின்றனர். மனிதர்கள் பல சிக்கலான சமூக அமைப்புகளை  உருவாக்கியுள்ளனர். இவற்றுள் குடும்பங்கள் தொடக்கம் நாடுகள் வரையான அமைப்புகள் அடங்கும். மனிதர்களிடையேயான சமூகத் தொடர்புகள், பெருமளவுக்கு வேறுபடுகின்ற மரபுகள், சடங்குகள், நெறிமுறைகள், விழுமியங்கள், சமூக நெறிகள், சட்டங்கள் போன்றவற்றை உருவாக்கியுள்ளன.

நமது அன்றாட வாழ்வில் 7 வகை மனிதர்கள் கவனிக்கப்படவேண்டியவர்களாக இருக்கிறார்கள். அது பற்றி இங்கு பார்க்கலாம்…

உப்புமூட்டை மனிதர்கள்: இந்த நபர்கள் உங்கள் ஆற்றலை குறைக்கிறார்கள், அதோடு உங்கள் நேரத்தையும் வீணடிப்பவர்கள்.

உங்கள் தேவைகளைக் கருத்தில் கொள்ளாமல் அவர்களுக்காக எல்லாவற்றையும் செய்ய வேண்டும் என்று அவர்கள் எதிர்பார்க்கிறார்கள். அவர்கள் உங்கள் ஆற்றல், நேரம் மற்றும் வளங்களை சுரண்டுவோர்.

கொசு மனிதர்கள்: இந்த நபர்கள் உங்கள் வாழ்க்கையில் எதிர்மறையைச் செலுத்தினாலும் உங்களிடமிருந்து நன்மைகளைப் பெற விரும்புகிறார்கள். அவர்கள் வழங்குவதற்கு நல்ல விசயம் எதுவும் அவர்களிடம் இருக்காது. ஆனால் எப்போதும் மற்றவர்களிடமிருந்து

என்ன எடுக்க முடியும் என்பதிலேயே முறையாக இருப்பார்கள்.

ஆதிக்க மனிதர்கள்: இந்த நபர்கள் பெருமையைத் தேடுபவர்கள் மற்றும் பிறரை கட்டுப்படுத்துபவர்கள். அவர்கள் ஒருமுறை உங்களுக்கு உதவினாலும், உங்கள் வாழ்க்கையில் ஆதிக்கம் செலுத்த விரும்புபவர்கள். அவர்கள் உங்களை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருக்கவும் உங்கள் சுதந்திரத்தை கட்டுப்படுத்தவும்  விரும்புபவர்கள்.

முதலை மனிதர்கள்: இவர்கள் உண்மையான நோக்கங்கள் இல்லாத பாசாங்கு மனிதர்கள். அவர்கள் உங்களின்  ரகசியங்களை அறிந்து கொள்வதற்காக உங்களுடன் நெருங்கிப் பழகுவார்கள், மேலும் உங்களுக்குள் பிரச்சனை ஏற்படும் போது அந்தத் தகவலை உங்களுக்கு எதிராகப் பயன்படுத்தக்கூடிய கொடியவர்கள். அவர்கள் பொய்யர்கள், முதுகில் குத்துபவர்கள்.

பச்சோந்தி மனிதர்கள்: இந்த பொறாமை கொண்ட நபர்கள் உங்களுடன் ஆரோக்கியமற்ற போட்டியில் இருப்பவர்கள். அவர்கள் எதிர்மறையான நோக்கங்களுடன் உங்கள் முன்னேற்றத்தை ரகசியமாக கண்காணித்து, உங்கள் வெற்றிகளை ஆதரிக்காமல் அல்லது கொண்டாடாமல் உங்கள் தவறுகளை பெரிதாக்குபவர்கள். கொஞ்சம் அசந்தால் உங்களை குற்ற உணர்வில் தள்ளி விடுவார்கள்.

கனவுக் கொலையாளிகள்: இந்த வகை மனிதர்கள் உங்கள் கனவுகளைப் பாராட்டவோ அல்லது ஆதரிக்கவோ மாட்டார்கள். அவர்கள் உங்கள் தோல்விகளைவிரும்புபவர்கள். அதை மனதார ரசிப்பவர்கள். எப்போதும் எதிர்மறையான விளைவுகளை உண்டாக்குபவர்கள். தீர்வுகளுக்குப் பதிலாக அதிக சிக்கல்களை உருவாக்குகிறார்கள்.

குப்பை மனிதர்கள்: இந்த நபர்கள் எதிர்மறைமற்றும் கெட்ட செய்திகளைக் கொண்டு வருகிறார்கள். அவர்களின் வாழ்க்கை குப்பைகளால் நிரம்பியுள்ளது, அதோடு அவர்கள் உங்கள் ஊக்கத்தை கெடுத்து, மனச்சோர்வை ஏற்படுத்தும் தகவல்களை பரப்புபவர்கள். துரதிர்ஷ்டவசமாக பிறர் இதயத்தை நொறுக்கி, அதை செய்தியாக்கி, அதில் சந்தோசப்பட்டு வளர்கிறார்கள்.

உங்களைச் சுற்றியுள்ள மனிதர்களை மதிப்பீடு செய்து, நீங்கள் நேர்நிலையான தாக்கங்களால் சூழப்பட்டிருப்பதை உறுதி செய்வது உங்கள் பொறுப்பு.

நீங்கள் நேர்நிலையான மனிதர்களுடன் பழகும்போதும், எதிர்மறையானவர்களிடமிருந்து உங்களை துண்டித்துக்கொள்ளும் போதும் உங்கள் வாழ்க்கை வெற்றிக்கான சரியான திசையில் நகரும். இன்பத்தைப்போல துன்பமும் கடவுளின் வரப்பிரசாதமே. அதன் மூலமும் கடவுள் நமக்கு கருணையே புரிகிறார்.

புத்திசாலிகளைப் போல சிந்தியுங்கள் ஆனால் சாதாரண நபர்களைப் போல பேசுங்கள். மனம் சோர்வடையும் போது நம்பிக்கையாய் பேசுபவர்களோடு நேரம் செலவிடுங்கள். நிச்சயமாக நீங்கள் நம்பக்கூடியவர்கள் வார்த்தையிலேயே உங்களுக்கு வைத்தியம் பார்த்து விடுவார்கள்.

நாட்கள் எல்லாம் அழகாய் பிறக்கிறது. நம் மனநிலை தான் தினமும் தடுமாறுகிறது. வாழ்க்கையில் எல்லா விஷயமும் நமக்கு பிடிச்ச மாதிரி நடக்காது. சில விஷயம் நடக்கும். சில விஷயம் நாம் தான் நடத்த வேண்டும்.

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *