சவுக்கு சங்கர், மருத்துவமனையில் அனுமதி
![சவுக்கு சங்கர், மருத்துவமனையில் அனுமதி](https://tn96news.com/wp-content/uploads/2024/07/savukku-shankar-850x560.webp)
பெண் போலீசார் மற்றும் போலீஸ் அதிகாரிகள் குறித்து அவதூறாக பேசிய வழக்கில் யூடியூபர் சவுக்கு சங்கரை கடந்த மே மாதம் 4ம் தேதி கைது செய்யப்பட்டார். பின்னர் அவர் மீது பல்வேறு காவல் நிலையங்களில் 17 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் இதுவரை 10 வழக்குகளில் அவருக்கு ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.
பெண் போலீசாரை அவதூறாகப் பேசிய வழக்கில், சவுக்கு சங்கரை உதகை நடுவர் நீதிமன்றத்தில் கடந்த திங்கள்கிழமையன்று போலீசார் ஆஜர்படுத்தினர். இதனையடுத்து போலீசாரின் கோரிக்கையை ஏற்று ஒருநாள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க நீதிபதி அனுமதி அளித்தார். பின்னர் உதகை நடுவர் நீதிமன்றத்தில் நேற்று சவுக்கு சங்கரை போலீசார் ஆஜர்படுத்தினர்.
இந்நிலையில் சவுக்கு சங்கர் திடீர் உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கோவையில் இருந்து சென்னை புழல் சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டபோது சவுக்கு சங்கருக்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டதன் காரணமாக அவர் சேலம் மாவட்டம் ஆத்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்
![Digiqole Ad](https://tn96news.com/wp-content/uploads/2023/01/add-1.jpg)