மனைவியை கொன்றவருக்கு ஆயுள் தண்டனை

தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் தெருவை சேர்ந்த ராஜபுஷ்பம் (வயது 26) என்பவரை குடும்ப பிரச்சினை காரணமாக கட்டையால் தாக்கி கொலை செய்த வழக்கில் அவரது கணவர் கணவரான நவீன்குமார் (32) கைதானார்.
மபின்னர் அவர் மீது குலசேகரன்பட்டினம் போலீசார் வழக்கு தொடர்ந்தனர். தூத்துக்குடி மகிளா நீதிமன்றத்தில் நடந்த இந்த வழக்கை விசாரித்த நீதிபதி மாதவ ராமானுஜம்நேற்று தீர்ப்பு வழங்கினார்.
குற்றம் சாட்டப்பட்ட நவீன்குமாருக்கு ஆயுள் தண்டனை மற்றும் ரூ 2,000/- அபராதமு, மேலும் 7 வருடம் கடுங்காவல் சிறை தண்டனை மற்றும் ரூ. 1000/- அபராதமும் விதித்து மேற்படி சிறை தண்டனைகளை ஏக காலத்தில் அனுபவிக்க உத்தரவிட்டு தீர்ப்பு வழங்கினார்.
இவ்வழக்கை சிறப்பாக புலனாய்வு செய்த அப்போதைய குலசேகரன்பட்டினம் காவல் நிலைய ஆய்வாளர் மீனாட்சிநாதன் மற்றும் அரசு தரப்பு வழக்கறிஞர் எல்லம்மாள் , விசாரணைக்கு உதவியாக இருந்த தலைமை காவலர் முருகன் ஆகியோரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் பாராட்டினார்.
