• April 27, 2024

தூத்துக்குடி தொகுதி திமுக வேட்பாளர் கனிமொழி வேட்பு மனு  தாக்கல்

 தூத்துக்குடி தொகுதி திமுக வேட்பாளர் கனிமொழி வேட்பு மனு  தாக்கல்

தமிழ்நாட்டில் ஏப்ரல் 19ம் தேதி மக்களவை தேர்தல் நடைபெறவுள்ளது. தூத்துக்குடி நாடாளுமன்றத் தொகுதியில் மீண்டும் போட்டியிடும் திமுக வேட்பாளர் கனிமொழி கருணாநிதி, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அலுவலர்/ மாவட்ட ஆட்சியர் கோ.லட்சுமிபதியிடம் தனது வேட்பு மனுவைத் தாக்கல் செய்தார்.

தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக செயலாளரும், சமூக நலன் – மகளிர் உரிமைத்துறை அமைச்சருமான பெ.கீதா ஜீவன், தூத்துக்குடி தெற்கு மாவட்ட திமுக செயலாளரும், மீன்வளம், மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சருமான அனிதா ஆா்.ராதாகிருஷ்ணன், தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, இந்தியத் தேசிய காங்கிரஸ் துணைத் தலைவர் ஏபிசி.சண்முகம் ஆகியோர் உடன் இருந்தனர்.

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *