• May 8, 2024

இலவச சூரியஒளி மின்சார திட்டம்: அஞ்சல் அலுவலகங்களில் பதிவு செய்யலாம்

 இலவச சூரியஒளி மின்சார திட்டம்: அஞ்சல் அலுவலகங்களில் பதிவு செய்யலாம்

இந்தியாவில் உள்ள ஒரு கோடி வீடுகளுக்கு 300 யூனிட் இலவச சூரியஒளி  மின்சாரம் வழங்கும் நோக்கத்துடன் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள திட்டமே பிரதம மந்திரியின்  இலவச சூரிய ஒளி  மின்சார திட்டம்.

இத்திட்டத்தின் மூலம் வீட்டின் கான்கிரீட் மேற்கூரையின் மீது சோலார் பேனல் நிறுவ சோலார் பேனல்களின் விலையில் 40% மானியம் வழங்கப்படும்.

ஆஸ்பெஸ்டாஸ் சீட் அடிப்படையிலான கூரைகளை கொண்ட வீடுகளின் தரவுகள் பதிவு செய்ய முடியாது.

இத்திட்டத்தின் மூலம் மின் கட்டணத்தை சேமிக்க முடியும். காலியான கூரையை பயன்படுத்தி கொள்ளலாம். கூடுதல் இடம் தேவை இல்லை. கார்பன் வெளியேற்றத்தை குறைப்பதன் மூலம் நீண்ட கால ஆற்றல் சேமிப்பு மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஆகியவை உறுதிப்படும்.

இத்திட்டத்தின் மூலம்  பபன்பெற நுகர்வோர் தங்கள் தொலைபேசி எண், மின்னஞ்சல் முகவரி, மின் இணைப்பு எண். வீட்டின் கான்கிரீட் மேற்கூரையின் புகைப்படம் ஆகியவற்றை பிரதம மந்திரியின் சூரிய வீடு என்ற செயலியில் 8.3.24 க்கு முன்பாக பதிவேற்றம் செய்து முடிக்க வேண்டும். இதற்கு வசதியாக இந்திய அஞ்சல் துறை மூலமாக சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

எனவே பொதுமக்களும் தங்கள் பகுதிக்கு வரும் அஞ்சல்காரரையோ, அருகில் உள்ள ஏதேனும் அஞ்சல் அலுவலகத்தையோ அணுகி பிரதம மந்திரியின் இலவச சூரிய ஒளி மின்சார திட்டத்தில் இணைந்து பயன்பெருமார் கோவில்பட்டி  கோட்டத்தின் அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் சுரேஷ் கேட்டுக்கொண்டுள்ளார்.    

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *