சிறு தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் சார்பில் 1000 அரிசி பைகள் நிவாரண உதவி
தென் மாவட்டத்தில் கன மழை காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவியாக நேஷனல் சிறு தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் சங்கம் சார்பாக 1000 அரிசி பைகள் வழங்கப்பட்டுள்ளன.
கோவில்பட்டி நகராட்சி தலைவர் கருணாநிதி முன்னிலையில் அமைச்சர் கீதா ஜீவன் மூலமாக வழங்கப்பட்டது. நேஷனல் சிறு தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் சங்க தலைவர் எம் பரமசிவம், செயலாளர் வி. எஸ். சேதுரத்தினம், துணைத் தலைவர்கள் ஆர். கோபால்சாமி, ஆர். வரதராஜன் பெருமாள் பட்டி மாரியப்பன், எம். சின்ன கொம்பையா, ஜி. கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் இந்த சந்திப்பில் பங்கேற்றனர்.