• May 9, 2024

காங்கிரஸ் இலக்கிய அணி  நிர்வாகிகள் கூட்டம்

 காங்கிரஸ் இலக்கிய அணி  நிர்வாகிகள் கூட்டம்

தமிழ் நாடு காங்கிரஸ் இலக்கிய அணி சார்பில் வருடாந்திர மாநில, மாவட்ட நிர்வாகிகள் கோவில்பட்டி காந்தி மண்டபத்தில் நடைபெற்றது. மாநில தலைவர் பி.எஸ்.புத்தன் தலைமை தாங்கினார். கோவில்பட்டி நகர தலைவர் கே.டி.பி. அருண்பாண்டியன், கமிட்டி  உறுப்பினர் திருப்பதிராஜா முன்னிலை வகித்தனர். மாநில துணை தலைவர் முத்து வரவேற்று பேசினார்

கூட்டத்தில் தமிழ்நாடு பொது செயலாளர் அனுசுயாதேவி, ஆலடி சங்கர் ஐயா, சிங்கதர்மன், எஸ்.ஆர்.பால்துரை, மாவட்ட செயலாளர் துரைராஜ், மாநில செயலாளர் காளிதாஸ்,ஐ.என்.டி.யு.சி. ராஜசேகரன்,மாவட்ட பொருளாளர் காமராஜ்,கண்ணாயிரம் முத்து, மாரிமுத்து, நேதாஜி காளிதாஸ், பசுவந்தனை முருகன், முத்து மற்றும் தூத்துக்குடி வடக்கு மாவட்ட காங்கிரஸ் நகர வட்டார நிர்வாகிகள் இலக்கிய அணி சார்ந்த மாநில மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர் கூட்ட முடிவில்  வடக்கு மாவட்ட இலக்கிய அணி தலைவர் சிவப்பிரகாசம் நன்றி கூறினார்

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *