• June 7, 2025

கோவில்பட்டி அருகே அனுமதியின்றி செயல்பட்ட பட்டாசு ஆலைக்கு `சீல்’

 கோவில்பட்டி அருகே அனுமதியின்றி செயல்பட்ட பட்டாசு ஆலைக்கு `சீல்’

கோவில்பட்டி வட்டம், நக்கலமுத்தன்பட்டி  கிராமத்தில் மாணிக்கம் ஜெயராஜ் என்பவருக்கு சொந்தமான இரண்டு பகுதிகளாக பிரிக்கப்பட்ட நீளமான கட்டிடத்தில் கீழ் கடைசியில் உள்ள இரண்டு அறைகளில் ஒரு அறையில் வேதிப்பொருட்களை இருப்பு வைத்தும் மற்றொரு அறையில் புஸ்வானம் வகை மற்றும் அணுகுண்டு வகை பட்டாசுகளை சணல் சுற்றி தயாரிப்பு பணி நடைபெற்று வந்தது.

இதில் 5 பெண்கள் மற்றும் 2 ஆண்கள் ஈடுபட்டு வந்தனர். உரிய அனுமதியின்றி பொருட்களை கையாள்வது மட்டுமல்லாமல் பட்டாசுகளை உற்பத்தி செய்யும் பணியில் ஈடுபட்டிருந்ததால் அந்த அறை இரவு 7 மணி அளவில் கோவில்பட்டி தாசில்தார் லெனின் தலைமயிலான அதிகாரிகளால் ஆய்வு செய்யப்பட்டு காவல்துறை, தீயணைப்பு துறை மற்றும் கிராம நிர்வாக அலுவலர் ஆகியோர் உடன் இருக்க சீல் வைக்கப்பட்டது .

அனுமதியின்றி பட்டாசு தயார் செய்யும் பணியில் ஈடுபட்ட நபர் ஜெயா ஃபயர் ஒர்க்ஸ் முக்கூட்டு மலை என்ற நிறுவனத்தினை நடத்திவரும் ஜெயராஜ் என்று  முதல் கட்ட விசாரணையில் தெரிய வருகிறது மேற்படி ஃபயர் ஒர்க்ஸ் நிறுவனமானது இடி மின்னல் தாக்கியதால் கடந்த 2 வருடங்களுக்கு மேலாக உரிமம் ரத்து செய்யப்பட்டு மூடப்பட்டு உள்ளது என்பது குரிப்பிடத்தக்கது,.

அதில் உள்ள வேதிப்பொருட்கள் என்ன வகையான வேதிப்பொருட்கள் உள்ளது என்பதை உடனடியாக கண்டறிய இயலவில்லை என்பதால் அதற்குரிய தொழில்நுட்ப அலுவலர்கள் ஆய்வின் போது வரவில்லை என்பதால் சீல் மட்டும் வைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து நாலாட்டின்புதூர் காவல் நிலையத்தில் கிராம நிர்வாக அலுவலரால் குற்றவியல் வழக்கு தொடர புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது.

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *