இந்திய கம்யூனிஸ்டு நூதன போராட்டம்
கோவில்பட்டியை அடுத்த இளையரசனேந்தல் கிராமத்தில் ஏழைகளுக்கு இலவச வீட்டுமனை பட்டா கேட்டு தாசில்தாரிடம் பலமுறை மனு கொடுத்தும் பலன் இல்லாததால் இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் பல்வேறு கட்ட போராட்டங்கள் நடத்தபட்டது.
பின்னர் ஆட்சியரை சந்தித்து முறையிட்டதன்பெரில் தகுதியான நபர்களை தேர்வு செய்து அறிக்கை கொடுக்கும்படி உத்தரவிட்டும் இன்றுவரை யாருக்கும் இலவச வீட்டுமனை பட்டா கிடைக்கவில்லை. இதனால் கோவில்பட்டி தாலுகா இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் இன்று காலை நூதன போராட்டம் நடத்தப்பட்டது.
இ.எஸ்.ஐ.,மருத்துவமனை முன்புறம் தாலுகா செயலாளர் ஜி.பாபு தலைமையில், இளையரசனேந்தல் கிளை செயலாளர் இன்னாசிமுத்து முன்னிலையில் கட்சியினர் கூடினார்கள். அவர்கள் ஒரு கழுதையை கொண்டு வந்து அதனிடம் மனு கொடுத்து நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தில் மாவட்ட செயலாளர் கரும்பன் , நகர செயலாளர் சரோஜா, நிர்வாகிகள் சேதுராமலிங்கம், பரமராஜ், ராமகிருஷணன், முனியசாமி, சுரேஷ்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர். போராட்டத்தில் ஈடுபட்ட 34 பெண்கள் உள்பட 47பேரை போலீசார் கைது செய்தனர்.