கோவில்பட்டியில் சிறந்த அங்கன்வாடி பணியாளர்களுக்கு பாராட்டு
தமிழக அரசின் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி பணிகள் திட்டத்தின் கீழ் செயல்படும் அங்கன்வாடி மையங்களில் ஆரம்பகால குழந்தை பராமரிப்பு மற்றும் கல்வி அளித்தலில்சிறந்த அங்கன்வாடி பணியாளர்களுக்கு கோவில்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலக கூட்டரங்கில் நடந்த நிகழ்ச்சியில் சான்றிதழ் மற்றும் பரிசுகள் ஜே.சி.ஐ. சார்பில் வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சிக்கு கோவில்பட்டி வட்டார குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் தாஜூன்னிசா பேகம் தலைமை தாங்கினார். அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர் முத்து முருகன் முன்னிலை வகித்தார்.
ஜே.சி.ஐ.செயலாளர் சூர்யா அனைவரையும் வரவேற்றார்.
கோவில்பட்டி வட்டாரத்தில் லிங்கம்மாள்தேவி,மகேஸ்வரி,ராதா,காந்திமதி,மெர்சி,விஜயலட்சுமி, ஆகியோருக்கும் கயத்தார் வட்டாரத்தில் ஜோதிலட்சுமி, குரு லட்சுமி, பி.கோமதி, ஆபிதா பானு, தமிழ்ச்செல்வி, கீதாலட்சுமி, விஜயலட்சுமி, எஸ். கோமதி ஆகியோருக்கும் சிறந்த அங்கன்வாடி பணியாளர்களுக்கான சான்றிதழ் மற்றும் பரிசினை கோவில்பட்டி ஜே.சி.ஐ. தலைவர் தீபன் ராஜ் வழங்கி பாராட்டி பேசினார்.
விழாவில் கோவில்பட்டி,கயத்தாறு வட்டார பகுதிகளிலிருந்து 100க்கும் மேற்பட்ட அங்கன்வாடி பணியாளர்கள் கலந்து கொண்டனர்.
முடிவில் குழந்தைகள் வளர்ச்சி திட்ட மேற்பார்வையாளர் முத்துமாரி நன்றி கூறினார்.