• June 7, 2025

கோவில்பட்டியில் அண்ணாமலை நடை பயணம்; வழிநெடுக வரவேற்பு- பொதுமக்களிடம் மனுக்கள் பெற்றார்

 கோவில்பட்டியில் அண்ணாமலை நடை பயணம்; வழிநெடுக வரவேற்பு- பொதுமக்களிடம் மனுக்கள் பெற்றார்

ஊழலுக்கு எதிராக விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும் மத்திய பா.ஜனதா  அரசின் 9 ஆண்டு கால சாதனைகளை மக்களிடம் எடுத்து சொல்லும் வகையிலும் பா.ஜனதா மாநில தலைவர் அண்ணாமலை ‘என் மண்’ ‘என் மக்கள்’ என்ற தலைப்பில் நடைபயணம் மேற்கொண்டு வருகிறார்.
கடந்த மாதம் 28-ந் தேதி ராமேசுவரத்தில் தொடங்கிய இந்த பயணத்தை மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா தொடங்கி வைத்தார்.
கடந்த 6 மற்றும் 7 தேதிகளில் அவரது சுற்றுப்பயணத்தில் மாற்றம் செய்யப்பட்டது. 8 ந் தேதி நடை பயணம் ரத்து செய்யப்பட்டது. 9ந் தேதி மீண்டும் அண்ணாமலை தனது நடை பயணத்தை தொடங்ங்கினார் விருதுநகர் மாவட்டம் திருச்சுழியில் தொடங்கி அருப்புக்கோட்டை, விருதுநகர்,சிவகாசி, சாத்தூர் பகுதிகளில் நடைபயணம்
மேற்கொண்டார்.
தொடர்ந்து இன்று வெள்ளிக்கிழமை மாலை 6 மணிக்கு கோவில்பட்டியில் தனது பயணத்தை அண்ணாமலை தொடங்கினார்.
கோவில்பட்டி நகர எல்லையான
இனாம் மணியாச்சி சந்திப்பில் இருந்து நடை பயணம் புறப்பட்டது.
அண்ணாமலை, லட்சுமி மில், பத்மா மருத்துவமனை, கிழக்கு பார்க்ரோடு ராஜ் மகால், கதிரேசன் கோவில் ரோடு,  எட்டயபுரம் ரோடு, தலைமை  தபால் ஆபீஸ், புதுரோடு சந்திப்பு, அரசு மருத்துவமனை, அருண் பேக்கரி, புதுரோடு இறக்கம், மெயின்ரோடு, காமராஜர் சிலை, சத்யபாமா தியேட்டர், மெயின்ரோடு வழியாக அண்ணா பஸ் நிலையம் அருகே உள்ள தேவர் சிலை முன்பு நடைபயணத்தை முடித்தார் மொத்தம் 5.1 கி.மீ.தூரம் அண்ணாமலை நடந்து வந்தார்.

நடை பயணத்தில் அண்ணாமலையுடன்அகில இந்திய பொது செயலாளர் அமர் பிரசாத் ரெட்டி, நயினார் நாகேந்திரன் எம்.எல்.ஏ., முன்னாள் எம்.பி. சசிகலா புஷ்பா, மாநில நிர்வாகிகள்கரு நாகராஜன்,சிவந்தி நாராயணன்,தூத்துக்குடி வடக்கு மாவட்ட நிர்வாகிகள் சென்னகேசவன் வெங்கடேசன், அம்மன் மாரிமுத்து, புது அப்பனேரி கோபாலகிருஷ்ணன், வினோத், உள்ளிட்ட  நிர்வாகிகள், ஆயிரக்கணக்கான தொண்டர்கள், கட்சி கொடிகள் உடன் நடந்து வந்தனர். மோடி உருவ முகமூடி அணிந்திருந்தனர்.
நடைபயணம் மேற்கொண்ட அண்ணாமலைக்கு வழிநெடுகிலும் சிறப்பானவரவேற்பு அளிக்கப்பட்டது.சாலையின் இரு புறங்களிலும் காத்திருந்த பொதுமக்கள், அண்ணாமலையை கண்டதும் கரகோஷம் எழுப்பினார்கள். அவர்களைப் பார்த்து அண்ணாமலை தனது மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டார்.
மேலும் பொது மக்களிடம் அருகில் சென்று நன்றி தெரிவித்தார். அண்ணாமலை சந்தித்து பொதுமக்கள் நிறைய பேர் கோரிக்கை மனுக்கள் அளித்தனர். அவற்றை பெற்றுக் கொண்டு உரிய தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தார்.


இரவு 9.30 மணிக்கு மேல் அண்ணா பஸ் நிலையம் அருகே உள்ள பயணியர் மாளிகை அருகே அண்ணாமலை முடித்துக் கொண்டார். பின்னர் திறந்த வேனில் இருந்தபடி பேசினார்.
அதன்பிறகு அண்ணாமலை, கோவில்பட்டியில் இரவு தங்கினார்.நாளை 12-ந்தேதி எட்டயபுரத்தில் தனது நடை பயணத்தை தொடங்கும் அண்ணாமலை விளாத்திகுளம் , ஓட்டப்பிடாரம் பகுதிகளில் நடை பயணம் மேற்கொண்டபிறகு தூத்துக்குடியில் இரவு தங்குகிறார்.

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *