பாண்டவர்மங்கலம் பஞ்சாயத்தில் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி

கோவில்பட்டி பாண்டவர்மங்கலம் பஞ்சாயத்தில் 75வது சுதந்திர தின பெருவிழாவை முன்னிட்டு நாடு முழுவதும் என் மண் என்னுடையதேசம் நிகழ்ச்சியை முன்னிட்டு அனைத்து கிராம ஊராட்சிகளிலும் தலா 75 மரக்கன்றுகள் வீதம் நடப்பட்டு வருகிறது.
பிரதமர் நரேந்திர மோடி, பஞ்சிப் பிரான் உறுதிமொழி அடிப்படையிலும், நமது இந்திய சுதந்திர போராட்ட மாவீரர்களின் நினைவாகவும் , மரம் நடும் நிகழ்ச்சியை மத்திய அரசு மற்றும் மாநில அரசுடன் இணைந்து செய்து வருகிறது.
அதன் ஒரு பகுதியாக தூத்துக்குடி மாவட்டம் நேரு யுவ கேந்திராவும், பாண்டவர்மங்கலம் கிராம பஞ்சாயத்து மற்றும் கஸ்தூரிபாய் காந்திஜி மகளிர் மன்றமும் இணைந்து மரக்கன்று நடும் நிகழ்ச்சியை பாண்டவர்மங்கலம் கிராமத்தில் நடத்தின.
பாண்டவர்மங்கலம் கிராம பஞ்சாயத்து தலைவர் கவிதா அன்புராஜ் தலைமையில் அரசு ஊழியர் குடியிருப்பு பகுதிகள், பூங்கா, பஞ்சாயத்து வளாகம் மற்றும் பாண்டவர்மங்கலம் கிராமத்தில் உள்ள பொது இடங்களில் மரக்கன்றுகள் நடப்பட்டது.
இந்நிகழ்ச்சிக்கு தூத்துக்குடி மாவட்டம் அரசு அச்சகத் துறை சேர்மன் அன்புராஜ், மகளிர் மன்ற தலைவி அமுதா, மன்ற ஆலோசகர் விஜயன், பாண்டவர்மங்கலம் ஊராட்சி மன்ற செயலர் குருவம்மாள், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு பணி திட்ட ஒருங்கிணைப்பாளர் கலைச்செல்வம், மகளிர் குழு உறுப்பினர்கள் முருக லட்சுமி, பரமேஸ்வரி வள்ளியம்மாள், வேதவல்லி, ஜீவா உள்பட பலர் கலந்து கொண்டனர்.
