கோவில்பட்டி நகராட்சி பள்ளி மாணவர்களுக்கு சுகாதார பெட்டகம்

கோவில்பட்டி ரோட்டரி சங்கம் சார்பில் பங்களா தெரு நகராட்சி தொடக்க பள்ளி மாணவர்களுக்கு சுகாதார பெட்டகம் வழங்கும் நிகழ்ச்சி பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.
மாணவர்கள் சுகாதார பழக்கவழக்கங்களை கடைப்பிடித்து நலமுடன் வாழ்வதற்கு நகவெட்டி, சோப்பு, டுத் பிரஷ், சீப்பு, பற்பசை, உள்ளிட்ட சுகாதார பொருட்கள் அடங்கிய சுகாதார பெட்டகம் மாணவர்களுக்கு வழங்கப்பட்டது.
கோவில்பட்டி பங்களா தெரு நகராட்சி தொடக்கப்பள்ளியில் நடந்த நிகழ்ச்சிக்கு ரோட்டரி சங்க தலைவர் வெங்கடேஷ் தலைமை தாங்கினார்.
ரோட்டரி சங்க மாவட்ட தலைவர் விநாயகா ரமேஷ், ரோட்டரி மாவட்ட உதவி ஆளுநர் முத்துச்செல்வன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
செயலாளர் சரவணன் அனைவரையும் வரவேற்றார்.
ரோட்டரி சங்க முன்னாள் தலைவர் வீராச்சாமி தனது மனைவி ராஜலட்சுமியின் 80வது பிறந்தநாளை முன்னிட்டு நகராட்சி பள்ளி மாணவர்களுக்கு சுகாதார பெட்டகத்தை வழங்கினார். நிகழ்ச்சியில் ரோட்டரி சங்க முன்னாள் தலைவர்கள் சீனிவாசன், பரமேஸ்வரன்,விக்னேஷ், நாராயணசாமி, இணை செயலாளர் ராஜமாணிக்கம், உறுப்பினர்கள் மணிகண்ட மூர்த்தி, பூல்பாண்டி,கிருஷ்ணசாமி,பிரபாகரன்,மாரியப்பன்,முத்து முருகன் உள்ளிட்ட ஆசிரியர்கள், மாணவர்கள் பலர் கலந்து கொண்டனர். பள்ளி தலைமை ஆசிரியை ராஜ சரஸ்வதி நன்றி கூறினார்.
