பணி ஓய்வு பெற்ற ஆசிரியைக்கு பாராட்டு விழா
கோவில்பட்டி நாடார் நடுநிலைப் ஆசிரியை ராஜேஸ்வரி 36 ஆண்டுகள் பணி செய்து ஓய்வு பெற்றதை ஒட்டிபணி நிறைவு பாராட்டு விழா நடைபெற்றது. விழாவிற்கு நாடார் உறவின்முறைச் சங்க செயலர் ஜெயபாலன் தலைமை தாங்கினார். பொருளாளர் சுரேஷ்குமார், பத்திரகாளியம்மன் திருக்கோயில் தர்மகர்த்தா மாரியப்பன், பள்ளிச் செயலர் கண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
தலைமை ஆசிரியை செல்வி வரவேற்புரை ஆற்றினார். பள்ளி ஆசிரியைகள் ஜெய ஜீவா, தனலட்சுமி, அருணா, ஜெப அகிலா,சங்கரா கிட்ஸ் வித்யாலயா முதல்வர் மீனா, பள்ளியின் பணி நிறைவு தலைமை ஆசிரியர் சண்முகக்கனி, எபனேசர் ஜெயா ஆகியோர் பணி நிறைவு ஆசிரியரின் பணிகளை வாழ்த்தி பேசினர்.பள்ளி நிர்வாகம், ஆசிரிய ஆசிரியைகள் சார்பாக பணி நிறைவு ஆசிரியைக்கு நினைவுப் பரிசுகள் வழங்கப்பட்டன.
ஆசிரியை சகாய கலாவதி நன்றி கூறினார்.நிகழ்ச்சியினை ஆசிரியர் அருள் காந்தராஜ் தொகுத்து வழங்கினார். விழாவில் பள்ளிக் குழு உறுப்பினர் ராஜா அமரேந்திரன், பள்ளியின் பணி நிறைவு ஆசிரியர்கள் முத்தையா, முத்துலெட்சுமி, தங்க பேச்சியம்மாள், உட்பட பலர் கலந்து கொண்டனர்