கோவில்பட்டி புனித சூசையப்பர் திருத்தல திருவிழா கொடியேற்றம்
கோவில்பட்டி புனித சூசையப்பர் திருத்தல திருவிழா நேற்று (28.4.23) மாலை கொடியேற்றத்துடன் தொடங்கியது.
காமநாயக்கன் பட்டி திருத்தல பங்கு தந்தை அந்தோணி குருஸ் அடிகளார், உதவி பங்கு தந்தை ஜெரால்டு ரீகன் அடிகளார் பாளை மறை மாவட்ட செயலக முதல்வர் ஞானபிரகாசம் அடிகளார் கோவில்பட்டி திருத்தல பங்கு தந்தை அலோசியஸ் துரைராஜ் அடிகளார்,உதவி பங்கு தந்தை மகேஸ் அடிகளார் ,மற்றும் நாலாட்டின் புதூர் ,கீழஈரால் பங்கு அருட்தந்தையர்கள் இணைந்து புறாக்களை பறக்க விட்டு இறைமக்கள் ஜெபங்கள் செய்த வண்ணம் திருத்தல கொடியை ஏற்றி வைத்தனர்
அப்போது மேள தாளங்கள் ,மங்கள வாத்தியங்கள் முழங்க இறை மக்கள் இயேசுவே வாழ்க,மரியே வாழ்க என ஆனந்தமுழக்க மிட்டனர். தொடர்ந்து 10நாட்கள் திருத்தலத்தில் புனித நிகழ்வு களும் திருப்பலியும் ,இறை கலை நிகழ்ச்சிகளும் நடைபெற உள்ளன.
7-5-23 பத்தாம் நாள் அன்று பாளை மறை மாவட்ட முன்னாள் ஆயர் ஜூடு பால்ராஜ் அடிகளார் தலைமையில் திருவிழா திருப்பலியும் நற்கருணை பவனியும் நடைபெறும்.