தூத்துக்குடி மாவட்டத்தில் 4-ந் தேதி மது விற்பனைக்கு தடை

 தூத்துக்குடி மாவட்டத்தில் 4-ந் தேதி மது விற்பனைக்கு  தடை

தூத்துக்குடி மாவட்டத்தில் மகாவீர் ஜெயந்தி தினத்தை முன்னிட்டு ஏப்.4ஆம் தேதி  மது விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் வெளியிட்ட அறிவிப்பில் கூறி இருப்பதாவது:-

மகாவீர் ஜெயந்தி தினத்தை முன்னிட்டு ஏப்.4ஆம் தேதி தமிழ்நாடு மதுபான சில்லறை விற்பனை (கடை / பார்) விதிகள், 2003 விதி 12 துணை விதி இணைந்த பார்கள் மற்றும் எப்.எல்2/எப்.எல்.3 (1)-இன் படி அனைத்து அரசு டாஸ்மாக் மதுபான கடைகள், மதுபானக்கடைகளுடன் உரிமதலங்களும் மூடப்பட்டிருக்க வேண்டும். 

மேற்படி நாளில் மதுபான விற்பனை தடை செய்யப்பட்டுள்ளதால் அன்றைய தினம் மதுபான விற்பனை நடைபெறக் கூடாது. மேற்குறிப்பிட்ட தினத்தில் மதுபான விற்பனை, மதுபானத்தை ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு கடத்துதல், மதுபானத்தை பதுக்கி வைத்தல் போன்ற செயல்கள் கண்டறியப்பட்டால், சம்பந்தப்பட்ட நபர்கள் மீது தமிழ்நாடு மதுவிலக்கு தெரிவிக்கப்படுகிறது. அமலாக்கச்சட்டத்தின் கீழ் குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்

இவ்வாறு மாவட்ட ஆட்சியர் செந்தில் ராஜ் அறிவித்துள்ளார். 

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *