ஓட்டப்பிடாரத்தில், குழந்தைகள் பாதுகாப்பு குழு கூட்டம்
தமிழ்நாடு அரசின் சமுக பாதுகாப்புத்துறை மூலமாக தூத்துக்குடி மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலகு சார்பில் வட்டார அளவிலான குழந்தைகள் பாதுகாப்பு குழு கூட்டம் ஓட்டப்பிடாரம் ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் நடைபெற்றது,
ஓட்டப்பிடாரம் யூனியன் சேர்மன் எல்.ரமேஷ் தலைமை தாங்கினார். குழந்தைகளுக்கு எதிரான பாலியல் சீண்டல்கள் வண்கொடுமை குழந்தை தொழிலாளர் ஒழிப்பு குழந்தை பாதுகாப்பு குறித்து விவாதிக்கப்பட்டது..
இந்நிகழ்வில் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு நல அலுவலர் அனிதா, யூனியன் ஆணையாளர் .சிவபாலன்மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு திட்ட அலுவலர்கள், அரசுத்துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்…