• May 8, 2024

கோவில்பட்டியில் நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து பா.ஜனதா ஆர்ப்பாட்டம்

 கோவில்பட்டியில் நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து பா.ஜனதா ஆர்ப்பாட்டம்

கோவில்பட்டி நகராட்சி நிர்வாக சீர்கேடுகளை கண்டித்து பா.ஜனதா சார்பில் பஸ் நிலையம் எதிரே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. நகர தலைவர் சீனிவாசன் தலைமை தாங்கினார்.டாக்டர் விஜயகுமார் , அசோக் மற்றும் நகர பொறுப்பாளர்கள் முன்னிலை வகித்தனர்,

கூட்டத்தில் பேசியவர்கள், சொத்து பெயர் மாற்றம், புதிதாக தீர்வை போடுவதற்கு லஞ்சம் பெறப்படுவதாக குற்றம் சாட்டினார்கள். மேலும் ஆளுங்கட்சி உறுப்பினர்கள் வார்டுகளுக்கு மட்டும் சாலை, சாக்கடை வசதி செய்து தருவதாகவும் மற்ற கவுன்சிலர்கள் வார்டுகள் புறக்கணிக்கப்படுகிறது என்றும் குறிப்பிட்டனர்,

ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட பா.ஜனதா பொதுசெயலாளர் வேல்ராஜா, துணை தலைவர் பாலமுருகன், மாநில அரசு தொடர்பு பிரிவு செயலாளர் ராமகிருஷ்ணன், ஊடக பிரிவு மாவட்ட தலைவர் அம்மன் மாரிமுத்து, தொழில்துறை மாவட்ட தலைவர் மாரியப்பன், உள்பட பலர் கலந்து கொண்டனர்,

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *