ஈரோடு கிழக்கு இடைதேர்தல்: காங்கிரஸ் கலைப்பிரிவு பணிக்குழு அமைப்பு
தமிழ்நாடு காங்கிரஸ் கலைப்பிரிவு தலைவர் கே.சந்திரசேகரன் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-
ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்ற இடைத்தேர்தலில், மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி சார்பில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர்.ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் வெற்றிக்காகப் பணியாற்ற, தமிழ்நாடு காங்கிரஸ் கலைப்பிரிவு சார்பில் கீழ்க்கண்டவாறு பணிக்குழு அமைக்கப்பட்டுள்ளது.
இவர்கள், ஏற்கனவே தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியால் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி செயல்தலைவர் மோகன் குமாரமங்கலம் தலைமையில் அமைக்கப்பட்டுள்ள தேர்தல் பணிக்குழுவுடன் இணைந்து களப்பணியாற்றுவார்கள் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
1) தலைவர் எஸ். ஜாபர் அலி, ஈரோடு மாநகர் மாவட்ட கலைப்பிரிவு தலைவர்
2) ஒருங்கிணைப்பாளர் – கலைமாமணிசி.கலாராணி (தாராபுரம்) கலைப்பிரிவு மாநில துணைத்தலைவர்
3) துணை ஒருங்கிணைப்பாளர் –.ஆர்.எஸ்.யுவராஜ் (சேலம்) ஒருங்கிணைப்பாளர் கலைப்பிரிவு மாநில துணைத்தலைவர்
4) உறுப்பினர்-. வி.ஆர்.சிவகுமார் மாவட்ட கலைப்பிரிவு துணைத்தலைவர்
5) உறுபினர் – பி.சுந்தரமூர்த்தி மாவட்ட கலைப்பிரிவு பொதுச்செயலாளர்
6) உறுப்பினர்- .கே. அஷ்ரப் அலி மாவட்ட கலைப்பிரிவு செயலாளர்