கோவில்பட்டி புதுகிராமத்தில் பூங்கா திறப்பு; சிறுவர்கள் உற்சாகம்

கோவில்பட்டி நகராட்சிக்கு உட்பட்ட புதுகிராமம் பகுதியில் புதிதாக பூங்காஅமைக்கப்பட்டு உள்ளது. பூங்காவில் சிறுவர் சிறுமியர் விளையாடுவதற்கு நிறைய உபகரணங்கள் இடம்பெற்றுள்ளன.
முன்னாள் நகர் மன்ற தலைவர் பெரியசாமி பெயரில் இந்த பூங்கா நிறுவப்பட்டுள்ளது. இந்த பூங்கா நேற்று முதல் பொதுமக்கள் பார்வைக்கு திறந்து விடப்பட்டது. அந்த பகுதி சிறுவர், சிறுமியர்கள் ஆர்வத்துடன் பூங்காவில் விளயாடி மகிழ்ந்தனர்.
முனாதாக நடந்த திறப்பு விழாவில் அமைச்சர் கீதாஜீவன், கனிமொழி எம்.பி. உள்பட பலர் கலந்து கொண்டனர்.
