பள்ளி செல்லா குழந்தைகள்: வீடு தேடி சென்று கள ஆய்வு

ஒருங்கிணைந்த பள்ளி கல்வி ஓட்டப்பிடாரம் வட்டார வள மையத்தின் சார்பில் பள்ளி செல்லா குழந்தைகள் பற்றிய கள ஆய்வு கோவில்பட்டி அருகே எப்போதும் வென்றான் பகுதியில் இன்று நடைபெற்றது.
களஆய்வில் 9 பள்ளி செல்லா மாணவர்களின் இல்லங்களுக்கு வீடு தேடி சென்று கல்வியின் முக்கியத்துவம் பற்றியும் நலத்திட்டங்கள் பற்றியும் சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் செல்வகுமார் எடுத்துரைத்தார். இதை தொடர்ந்து பள்ளிக்கு அனுப்புவதற்கு பெற்றோர் சம்மதம் தெரிவிக்க வைக்கப்பட்டது.
வட்டார கல்வி அலுவலர் பவனீந்தீஸ்வரன், வட்டார ஒருங்கிணைப்பாளர் மலர்கொடி, ஆசிரியப் பயிற்றுனர் செல்வி, கிராம நிர்வாக அலுவலர் முத்துவேல் கண்ணன் ஆகியோர் உடன் சென்றனர்.
கள ஆய்வு பணிக்கான ஏற்பாடுகளை வட்டார வள மைய மேற்பார்வையாளர் வனிதா செய்திருந்தார்.
