குற்றாலம் வந்த சுற்றுலா வேன் விபத்தில் 2 பேர் பலி
கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பத்தை சேர்ந்த 18 பேர் வேன் மூலம் குற்றாலத்திற்கு சுற்றுலா வந்தனர். மதுரை ஐகோர்ட்டு கிளை அருகே வேன் வந்து கொண்டிருந்தது. அப்போது திடீரென்று எதிர்பாராத விதமாக சாலையோரம் நின்று கொண்டிருந்த தண்ணீர் லாரி மீது மோதியது.
இதில் வேனின் முன்பகுதி முழுவதும் சேதம் அடைந்தது. இந்த விபத்தில் சிக்கி டிரைவர் உள்ளிட்ட 2 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், 10-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர்.
காயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இந்த விபத்து குறித்து மதுரை ஒத்தக்கடை போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். தண்ணீர் லாரியை நடு ரோட்டில் நிறுத்தி வைத்த லாரி டிரைவரை போலீசார் தேடி வருகின்றனர். இந்த விபத்து காரணமாக மதுரை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.