உலக தாய்ப்பால் வார விழா:கர்ப்பிணி பெண்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகம்
உலக தாய்ப்பால் வார விழாவை முன்னிட்டு கோவில்பட்டி அரசு மருத்துவமனை மற்றும் இன்னர் வீல் கிளப் கோவில்பட்டி இணைந்து விழிப்புணர்வு நிகழ்ச்சியை கோவில்பட்டி அரசு தலைமை மருத்துவமனை வளாகத்தில் நடத்தின. 80 கர்ப்பிணி பெண்கள் மற்றும் பாலூட்டும் தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகம் வழங்கப்பட்டது
இந்நிகழ்ச்சிக்கு கோவில்பட்டி அரசு மருத்துவமனை கண்காணிப்பாளர் டாக்டர் கமல வாசன் தலைமை தாங்கினார். குழந்தைகள் நல மருத்துவர் டாக்டர் துரை பத்மநாதன், டாக்டர் சுதா மற்றும் சங்க பட்டய தலைவி ஜெயஸ்ரீ ஆகியோர் சிறப்புரை ஆற்றினர்.
இன்னர்வில் கிளப் தலைவி அழகு மீனாட்சி மாரிமுத்து, துணை தலைவி டெய்சி மனோன்மணி, செயலாளர் கார்மல் ஜென்ஸி, பொருளாளர் விஜி கனி, நிர்வாக குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.