திருக்குறளை தேசிய நூலாக அறிவிக்க கோரி கையெழுத்து இயக்கம்
திருக்குறளை தேசிய நூலாக அறிவிக்க கோரி உலக திருக்குறள் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்தது வருகிறது. இந்த நிலையில் இன்று உலக திருக்குறள் கூட்டமைப்பின் கோவில்பட்டி குறள் மாவட்டம் சார்பில் கையழுத்து இயக்கம் நடத்தப்பட்டது.
காலை நேரத்தில் கோவில்பட்டி ராமசாமிதாஸ் பூங்காவுக்குள் நடைபயணம்
மேற்கொண்டவர்களை சந்தித்து கையெழுத்து பெறப்பட்டது. மத்திய அரசை வலியுறுத்தி இந்த கோரிக்கையை ஆதரித்து நிறைய பேர் கையெழுத்து போட்டனர்,
இன்னும் பல்வேறு பகுதிகளில் கையெழுத்து இயக்கம் நடத்தப்பட்டது. இறுதியில் இந்த கையெழுத்து பட்டியல் மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளது.