கோவில்பட்டி அரசு மகளிர் பள்ளி மாணவிகளுக்கான `மாற்றத்தை தேடி’ விழிப்புணர்வு முகாம்
![கோவில்பட்டி அரசு மகளிர் பள்ளி மாணவிகளுக்கான `மாற்றத்தை தேடி’ விழிப்புணர்வு முகாம்](https://tn96news.com/wp-content/uploads/2022/08/79e56404-a434-4363-8a50-318b245d0ab4-850x362.jpg)
கோவில்பட்டி உட்கோட்ட காவல்துறை சார்பில் கோவில்பட்டி அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் மாணவிகளுக்கான `மாற்றத்தை தேடி’ விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு கோவில்பட்டி காவல்துணை கண்காணிப்பாளர் வெங்கடேஷ் தலைமை தாங்கி மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கி பேசியதாவது:-
பள்ளியில் பயிலும் அனைவரும் குழந்தைகளே,கல்வி கற்க வேண்டிய வயதில் கல்வியையும்,ஒழுக்கத்தையும் மட்டுமே கற்றுக் கொண்டு சாதனையாளர்களாக உருவாக வேண்டும்.செல்போனில் தங்களது சுய விவரங்களை பதிவேற்றக்கூடாது, செல்போன் பயன்பாட்டை குறைத்துக் கொள்ள வேண்டும்
இவ்வாறு பேசினார்.
![](https://tn96news.com/wp-content/uploads/2022/08/b3f0e783-9fb7-410e-a0be-bf1d1c1d2e7e.jpg)
அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியை ஜெயலதா அனைவரையும் வரவேற்றார்.
கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய குற்றவியல் ஆய்வாளர் மங்கையர்க்கரசி , மாணவிகளின் பிரச்சனைகளை களைவது குறித்தும், காவல்துறையில் உள்ள இலவச அலைபேசி எண்கள் குறித்தும்,மாணவிகள் சாதிப்பதற்கு தேவையான வழிமுறைகள் குறித்தும் பேசினார்.
இந்நிகழ்ச்சியில் உதவி ஆய்வாளர்கள் சிலுவை அந்தோணி, அருள்மொழி, சத்யா, மகேஸ்வரி, மணிமேகலை, தலைமை காவலர்கள் ஜான்சிராணி, சத்தியபாமா, பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர் முத்து முருகன், உதவி தலைமை ஆசிரியை ரூத் ரத்னகுமாரி, கண்ணன், சீனிவாசன், பிரவீன், ஷெல்ட்டன், சுப்பிரமணியன், சென்னப்பன்,வேல்முருகன், காளிராஜ், உள்ளிட்ட ஆசிரியர்கள் மாணவிகள் பலர் கலந்து கொண்டனர்,
முடிவில் இசை ஆசிரியை அமல புஷ்பம் நன்றி கூறினார்
![Digiqole Ad](https://tn96news.com/wp-content/uploads/2023/01/add-1.jpg)