• April 25, 2024

ஒருங்கிணைப்பாளர் என்ற உணர்வில் ஓ.பன்னீர்செல்வம் எழுதிய கடிதம் செல்லத்தக்கதல்ல; எடப்பாடி பழனிசாமி பதிலடி

 ஒருங்கிணைப்பாளர் என்ற உணர்வில் ஓ.பன்னீர்செல்வம் எழுதிய கடிதம் செல்லத்தக்கதல்ல;  எடப்பாடி பழனிசாமி பதிலடி

அ.தி.மு.க. தலைமை நிலைய செயலாளர் என்ற பெயரில் எடப்பாடி பழனிசாமி, பொருளாளர் என்று குறிப்பிட்டு ஓ.பன்னீர்செல்வத்துக்கு இன்று ஒரு கடிதம் அனுப்பி இருக்கிறார், அந்த கடிதத்தில் கூறி இருப்பதாவது:-
அன்பு அண்ணன் அவர்களுக்கு வணக்கும்.
தங்களின் 29.6.2022-ம் தேதியிட்ட கடிதம் பத்திரிகைகளின் வாயிலாக தெரிந்து கொண்டேன். பின்னர் மகாலிங்கம் வழியாக பெறப்பட்டது.
கடந்த 23.6.2022 அன்று நடைபெற்ற கழக பொதுக்குழுவால் கொண்டு வரப்பட்ட கழக சட்டதிட்ட திருத்தங்கள் அங்கீகரிக்கப்படவில்லை.
ஆதலால் அந்த சட்டதிட்ட திருத்தங்கள் காலாவதி ஆகிவிட்ட்டது. எனவே கழக ஒருங்கிணைப்பாளர் என்ற உணர்வில் தாங்கள் எழுதியுள்ள கடிதம் செல்லத்தக்கதல்ல.
மேலும் உள்ளாட்சி அமைப்புகளில் தற்போது காலியாக இருக்கும் பதவிகளுக்கு நடைபெற உள்ள தேர்தலுக்கான வேட்புமனுதாக்கல் செய்வதற்கு கடைசிநாள் 27.6.2022 அன்று முடிவுற்ற நிலையில் இத்தனை நாட்கள் பொறுத்திருந்து கழகத்தின் வேட்பாளர்கள் அதிகாரப்பூர்வமாக அறிவிக்காத நிலையிலும் 27.6.2022 அன்று கூட்டப்பட்ட தலைமைக்கழக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்திற்கு தாங்கள் உட்பட அனைவருக்கும் முறையாக தகவல் தெரிவிக்கப்பட்டு மொத்தம் உள்ள 74 தலைமைக்கழக நிர்வாகிகளில் 65 பேர் கலந்து கொண்டனர். 4 பேர் உடல்நிலை சரியில்லை என்று தகவல் தெரிவித்தூ இருந்தனர். தாங்கள் அந்த கூட்டத்தை புறக்கணித்த நிலையில் தற்போதைய தங்களின் இந்த கடிதம் ஏற்புடையதாக இல்லை.
அதேபோல் நாம் இருவரும் கூட்டாக அழைப்பு விடுத்த கழகத்தின் பொதுக்குழுவை நடத்தவிடாமல் தடுத்து நிறுத்துவதற்கு தாங்கள், ஆவடி காவல் ஆணையருக்கு கடிதம் மூலம் புகார் அளித்தும், நீதிமன்றங்களின் மூலம் வழக்குகளை தாக்கல் செய்தும், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தை செயல்படாத நிலைக்கு கொண்டு செல்வதற்கான அனைத்து பணிகளையும் செய்துவிட்டு, தற்போது இப்படி ஒரு கடிதத்தை எனக்கு அனுப்புவது ஏற்புடையாக இல்லை என்பதை தெரிவித்து கொள்கிறேன்.
இவ்வாறு எடப்பாடி பழனிசாமி கூறி இருக்கிறார்.

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *