• May 5, 2024

ஒட்டகம் வாங்கி வந்து ஆற்று மணல் கடத்தியவர் கைது

 ஒட்டகம் வாங்கி வந்து ஆற்று மணல் கடத்தியவர் கைது

சிவகங்கை மாவட்டம் மறவமங்கலம் பஸ் ஸ்டாண்டில் நேற்று இரவு காளையார்கோவில் போலீசார் ரோந்தில் ஈடுபட்டிருந்தனர் . அப்போது மாட்டு வண்டியில் ஒட்டகத்தை கட்டி வருவதை பார்த்து சந்தேகத்தின் பேரில் சோதனை செய்தனர்.
அப்போது நாட்டாறு ஆற்றில் இருந்து மணல் கடத்தி வருவதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.பின்னர் வண்டியில் வந்தவரை கைது செய்து மணல் கடத்தி வந்த மாட்டு வண்டி மற்றும் ஒட்டகத்தை பறிமுதல் செய்து மறவமங்கலம் புறக்காவல் நிலையத்தற்கு கொண்டு சென்றனர்
அவரிடம் நடத்திய விசாரனையில் அவர் சிவகங்கை மாவட்டம், பல்லாக்கோட்டையை சேர்ந்த சரவணன் (வயது 52) என்பது தெரிய வந்தது. சவுதி அரேபியாவில் பணிபுரிந்த அவர் கடந்த 2 மாதத்திற்கு முன் சொந்த ஊருக்கு வந்ததாகவும், அப்போது ராஜஸ்தானில் இருந்து ஒட்டகம் ஒன்றை வாங்கி வளர்த்து வந்ததும்,மணல் கடத்தலில் ஈடுபட்டதும் தெரிய வந்துள்ளது.
ஒட்டகத்தை வைத்து மணல் கடத்தலில் ஈடுபட்ட சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *