அரசு-தனியார் பஸ்கள் மோதி விபத்து: 30 பயணிகள் காயம்

கடலூர் அருகே ஆலப்பாக்கத்தில் அரசு மற்றும் தனியார் பஸ்கள் மோதி விபத்துக்குள்ளானதில் 30 பயணிகள் காயமடைந்தனர்.
சென்னையில் இருந்து நாகை நோக்கி அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக பஸ் புறப்பட்டு சென்றது.. விழுப்புரம் – நாகை நான்கு வழிச்சாலையில் சென்று கொண்டிருந்தது. இந்த நிலையில் கடலூர் மாவட்டம் ஆலப்பாக்கம் அருகே, கடலூரில் இருந்து சிதம்பரம் நோக்கிச் சென்ற தனியார் பஸ் வந்தது. இந்த இரண்டு பஸ்களும் எதிரபாராத விதமாக மோதிக்கொண்டன.
தனியார் பஸ் இடது பக்கம் திரும்ப முயன்றபோது அரசு பஸ்சின் மீது மோதி விபத்துக்குள்ளாகி இருக்கிறது இந்த விபத்தில் அரசு பஸ், சாலையில் இருந்து வயல்வெளியில் இறங்கியது.
இந்த விபத்தில் 2 பஸ்களிலும் பயணம் செய்த 30 பயணிகள் காயமடைந்தனர். அவர்கள் தற்போது மீட்கப்பட்டு கடலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
