கோவில்பட்டியில் அமமுக சார்பில் நலத்திட்ட உதவிகள்

கோவில்பட்டி கிருஷ்ணன் கோவில் திடலில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா 77வது பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் தூத்துக்குடி புறநகர் வடக்கு மாவட்ட செயலாளர் பூலோகப்பாண்டியன் தலைமை தாங்கினார்.. அமமுக ஜெயலலிதா பேரவை வடக்கு மாவட்ட செயலாளர் லட்சம் வரவேற்புரையாற்றினார்.
அமமுக தூத்துக்குடி புறநகர் தெற்கு மாவட்ட செயலாளர் பொன்ராஜ், தூத்துக்குடி மாநகர் மாவட்ட செயலாளர் ஜானியேல் சாலமோன் மணி ராஜ்,கோவில்பட்டி நகர செயலாளர் செல்வம் (எ) செல்லத்துரை, ஒன்றிய செயலாளர்கள் ஈஸ்வரபாண்டியன், விஜயபாஸ்கரன்,கணபதி பாண்டியன், அனந்தப்பன், கண்ணன், வடிவேல் முருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்
அமமுக துணைப் பொதுச் செயலாளர் மற்றும் தென் மண்டல பொறுப்பாளர் மாணிக்கராஜா , முன்னாள் எம்.எல்.ஏ. அமமுக அமைப்பு செயலாளர் சிவபெருமாள், அமமுக செய்தி தொடர்பாளர், வழக்கறிஞர் பிரிவு துணைச் செயலாளர் குரு. முருகானந்தம், தலைமை கழக பேச்சாளர் பாண்டியன் ஆகியோர் சிறப்புரையாற்றினார்
மாவட்டக் கழக நிர்வாகிகள் அமிர்தராஜ், கிழவிபட்டி குமார் பாண்டியன்,சீனிவாசன், சண்முகத்தாய், முத்துலெட்சுமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். நகர இலக்கிய அணி செயலாளர் பேராட்சி பாலா நன்றி கூறினார்
