மதுரை மண்டலத்தில் திருச்செந்தூர் மார்க்கத்தில் செல்லும் அரசு பஸ்களில் கட்டணம் திடீர் உயர்வு

அரசு போக்குவரத்துக் கழகம் நெல்லை மண்டலத்தில் தூத்துக்குடி, நெல்லை, நாகர்கோவில் கோட்டமும், மதுரை மண்டலத்தில் மதுரை, விருதுநகர், திண்டுக்கல் கோட்டமும் உள்ளன. இக்கோட்டங்களின் கீழ் பல்வேறு போக்குவரத்து பனிமனைகள் உள்ளன. தினந்தோறும்
மதுரை மண்டல போக்குவரத்து கழகம் மூலம் மதுரையில் இருந்து மண்டேலா நகர், காரியாபட்டி, கல்குறிச்சி, பாளையம்பட்டி அருப்புக்கோட்டை, பந்தல்குடி மேலக்கரந்தை முத்துலாபுரம், எட்டையபுரம், கீழ ஈரால், எப்போதும் வென்றான் குறுக்குச்சாலை, தூத்துக்குடி, ஸ்பிக்நகர், பழைய காயல், ஆத்தூர், முக்காணி, ஆறுமுகனேரி காயல்பட்டிணம், திருச்செந்தூர் என இருபதுக்கும் மேற்பட்ட நிறுத்தங்கள் உள்ளன.
மதுரை மண்டலம் சார்பில் சுமார் 32 அரசு பஸ்கள், நெல்லை மண்டலம் சார்பில் 60 அரசு பஸ்கள், கோவை மண்டலம் சார்பில் சுமார் 9 அரசு பஸ்கள் தூத்துக்குடி மற்றும் அதன் மார்க்கமாக திருச்செந்தூருக்கு அரசு பஸ்கள் இயக்கப்படுகின்றன.
அதே போல் மறு மார்க்கமாக இதே வழித்தடத்தில் திருச்செந்தூரில் இருந்து மேலக்கரந்தை, அருப்புக்கோட்டை வழியாக மதுரைக்கும் இயக்கப்படுகிறது. இவ்வழித்தடத்தில் தூத்துக்குடி மற்றும் திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு தினந்தோறும் ஆயிரக்கணக்கான மக்கள் செல்கின்றனர்.
திருச்செந்தூரில் இருந்து மதுரைக்கு ரூ 172 கட்டணமும், தூத்துக்குடியில் இருந்து மதுரைக்கு ரூ 133 கட்டணமும் வசூலிக்கப்படுகிறது. இந்நிலையில் கடந்த 15 நாட்களுக்கு முன்பு திருச்செந்தூர் மற்றும் தூத்துக்குடியில் இருந்து வடக்கு நோக்கி மதுரைக்கு இடைப்பட்ட நிறுத்தங்களின் பயணக் கட்டணம் கனிசமாக எந்தவித அறிவிப்பின்றி உயர்த்தப்பட்டுள்ளது.
திருச்செந்தூரில் இருந்து ஆத்தூருக்கு இருபது நாட்களுக்கு முன் 17 ரூபாயாக இருந்து தற்போது 20 ரூபாயாகவும், ஆறுமுகநேரியில் இருந்து ஸ்பிக்நகருக்கு ரூ 20 இல் இருந்து ரூ. 25 ஆகவும் ஆத்தூரில் இருந்து ஸ்பிக் நகருக்கு ரூ 15 இல் இருந்து 20 ஆகவும் உயர்த்தப்பட்டு இருக்கிறது.
இதே போல் , தூத்துக்குடியில் இருந்து எப்போதும் வென்றான் ரூ 23 இல் இருந்து இருந்து ரூ 30 ஆகவும், தூத்துக்குடியில் இருந்து எட்டையபுரம் ரூ 41 இல் இருந்து 50 ஆகவும் , மேலக்கரந்தையில் இருந்து மண்டேலா நகருக்கு ரூ 60 இல் இருந்து 65 ஆகவும், மேலக்கரந்தையில் இருந்து மாட்டுத்தாவணிக்கு ரூ. 75 லிருந்து 80 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது.
தமிழகஅரசு பஸ் கட்டணத்தை உயர்த்தும் போது பொதுமக்களுக்கு முன்கூட்டி அறிவிப்பு செய்த பின் உயர்த்தும். ஆனால் தற்போது நாட்களுக்கு முன் மதுரை மண்டலம் முழுவதும் இது போன்று பேருந்து கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.
ஏற்கனவே பஸ் கட்டணம் பல முறை உயர்த்தப்பட்டுள்ளதால் மக்கள் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். பராமரிப்பு செலவு, மகளிர் கட்டணமில்லா பேருந்து, தியாகிகள், மாற்றுத் திறனாளிகளுக்கு பல்வேறு சலுகை கட்டணங்களால் அரசு போக்குவரத்துக் கழகத்துக்கு செலவுகள் இருந்தாலும் மக்கள் மீது திணிக்கப்படக்கூடாது. இருப்பினும் பேருந்து கட்டண உயர்வை அரசு பரிசீலனை செய்து பழைய கட்டணத்தைவசூலிக்க வேண்டும் என்று பேருந்தில் விதிக்க வேண்டும் கரிசல் பூமி விவசாயிகள் சங்கம் தலைவர் அ.வரதராஜன் கேட்டுக் கொண்டுள்ளார்.
