கோவில்பட்டியில் எம்.ஜி.ஆர். சிலைக்கு அதிமுகவினர் மரியாதை- கடம்பூர் ராஜு எம்.எல்.ஏ. இனிப்பு வழங்கினார்


மறைந்த தமிழ்நாடு முன்னாள் முதல்-அமைச்சரும், அ.தி.மு.க. நிறுவனத்தலைவருமான எம்.ஜி.ஆரின் 108-வது பிறந்த நாள் இன்று கொண்டாடப்பட்டது.
தூத்துக்குடி வடக்கு மாவட்ட அதிமுக சார்பில் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் இருந்து ஊர்வலமாக சென்று புதுரோட்டில் உள்ள எம்ஜிஆர் திருவுருவச்சிலைக்கு வடக்கு மாவட்டசெயலாளர், கடம்பூர் ராஜு எம்.எல்.ஏ. மாலை அணிவித்து மரியாதை செலுத்தி,பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினார்.
முன்னாள் எம்எல்ஏ மோகன், பொதுக்குழு உறுப்பினர் ராமச்சந்திரன், நகரச்செயலாளர் விஜயபாண்டியன்,ஒன்றிய செயலாளர்கள் பழனிச்சாமி, அன்புராஜ், அழகர்சாமி, செல்வக்குமார், வண்டானம் கருப்பசாமி, கலைப்பிரிவு மாவட்ட செயலாளர் போடுசாமி, வழக்கறிஞர்கள் ஈஸ்வரமூர்த்தி, சங்கர் கணேஷ், இளைஞர் இளம்பெண்கள் பாசறை மாவட்ட செயலாளர் கவியரசன்,
ஜெ பேரவை மாவட்ட இணைச்செயலாளர் நீலகண்டன்,மாவட்ட மாணவரணிதுணைத் தலைவர் செல்வகுமார், எம்ஜிஆர் இளைஞரணி மேற்கு ஒன்றிய செயலாளர் அம்பிகைபாலன், எட்டையாபுரம் நகரச் செயலாளர் ராஜ்குமார், மகளிரணி பத்மாவதி, சத்யா, கோமதி,வர்த்தக அணி ராமர்,அமைப்பு சாரா ஓட்டுனர் அணி லட்சுமணப்பெருமாள் ,ஜெபேரவை நகர செயலாளர் ஆபிரகாம் அய்யாதுரை,ஒன்றிய கவுன்சிலர்கள் இந்திரன், ராமர்,அதிமுக நிர்வாகிகள் செல்லையா, பசுபதி, சாத்தூரப்பன், வேல்முருகன், மாரிமுத்து பழனிச்சாமி,தங்கப்பாண்டியன்,முருகன், வார்டு கிளைச்செயலாளர்கள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.
மாலை அணிவிப்பு மரியாதையை தொடர்ந்து கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் திருக்கோவிலில் எம்ஜிஆர் பிறந்த நாளை முன்னிட்டு அன்னதானத்தை கடம்பூர் ராஜு தொடங்கி வைத்தார்.
கயத்தார் கிழக்கு ஒன்றியம் அதிமுக சார்பில் காமநாயக்கன்பட்டியில் எம்ஜிஆரின் திருவுருவப்படத்திற்கு கடம்பூர் ராஜு மாலை அணிவித்து மலர்தூவி மரியாதை செலுத்தி,பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினார்.
நிகழ்ச்சி ஏற்பாடுகளை கயத்தாறு கிழக்கு ஒன்றிய செயலாளர் வண்டானம் கருப்பசாமி செய்திருந்தார்.ஜெ பேரவை கிழக்கு ஒன்றிய செயலாளர் சாமிராஜ்,கலைப்பிரிவு மாவட்ட செயலாளர் போடுசாமி,மேற்கு ஒன்றிய எம்ஜிஆர் இளைஞர் அணி செயலாளர் அம்பிகை பாலன்,அதிமுக நிர்வாகிகள் மற்றும் கிளைச் செயலாளர்கள் கலந்து கொண்டனர்
