நூற்றாண்டு தொடக்க விழா: கோவில்பட்டி தாலுகா இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ஆலோசனை கூட்டம்


இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் நூற்றாண்டு தொடக்க விழாவை முன்னிட்டு, கோவில்பட்டி தாலுகா குழு,இந்திய தேசிய மாதர் சம்மேளனம்,ஏ ஐ டி யு சி ஆட்டோ சங்கம்,ஏ ஐ டி யு சி சுமை தூக்கும் தொழிலாளர் சங்கங்களின் சார்பில் ஆலோசனைக் கூட்டம் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி ஜீவா இல்லத்தில் வைத்து நடைபெற்றது
.மாவட்ட நிர்வாக குழு உறுப்பினர் சேதுராமலிங்கம் தலைமை தாங்கினார் ,தாலுகா செயலாளர் பாபு,மாவட்ட குழு உறுப்பினர்கள் ரஞ்சனி கண்ணம்மா, செந்தில் ஆறுமுகம் ஆகியோர் நூற்றாண்டு விழாவை சிறப்பாக நடத்துவது குறித்து பேசினார்கள்
.ஆலோசனைக் கூட்டத்தில் ஏ ஐ டி யு சி காமராஜர் சிலை லோடுமேன் சங்கம் பொருளாளர் தர்மராஜ், கணக்கர் கருப்பசாமி, இளையரசனேந்தல் ரோடு சங்க தலைவர் வள்ளிராஜ், செயலாளர் முனியசாமி,ஏ ஐ டி யு சி ஆட்டோ சங்கங்கள் பழைய பேருந்து நிலையம்,புதிய பேருந்து நிலையம், தட்சணாமூர்த்தி கோவில்,இளையரசனேந்தல் ரோடு,பசுவந்தனை ரோடு, பல்லாக்கு ரோடு, கழுகுமலை, வானரமுட்டி, மந்தித்தோப்பு ஆகிய ஆட்டோ சங்க நிர்வாகிகள் மற்றும் மாவட்ட குழு உறுப்பினர் செல்லையா,நகர உதவி செயலாளர் அலாவுதீன்,தாலுகா குழு உறுப்பினர்கள் சிங்கராஜ்,ரெங்கநாதன்,சுரேஷ் ரஞ்சிதம் ஜெகநாதன்,ஏ ஐ டி சி சீனிவாசன்,மாதர் சங்க நகர செயலாளர் விஜயலட்சுமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்
