வருமானத்தை அள்ளி தரக்கூடிய `சவுக்கு’

நாம் சிறுவர்களாக இருந்த போது சவுக்கு செடியின் இலையை பிடுங்கி அதில் ஓரு கணுவை எடுத்து மற்றொரு கணுக்குள் நுழைத்து விளையாடிஇருப்போம் அந்த செடி தான் சவுக்கு
இதுபள்ளிகளிலும் தோட்டங்களிலும் கல்லூரிகளில் வரப்பு ஓரங்களில் வேலியாக நடப்பட்ட இந்த மரப்பயிர் தற்போது காகித ஆலைக்கு (PAPER MILL) தேவையான முக்கிய முலப்பொருளாக வும் அதிக கலோரி வெப்பம் தரக்கூடிய எரிய பொருளாகவும் இந்த சவுக்கு பயன்படுகிறது. இது ஓரு அன்னிய நாட்டு மரம் ஆங்கிலேயேர்களால் நமது நாட்டு கொண்டுவரப்பட்டது.
சவுக்கு -இதனுடைய அறிவியல் பெயர் ( CASURINA ) இது கசுவரினேசியே என்ற தாவரக்குடும்பத்தை சேர்ந்தது இதனுடைய தாயகம் தெற்காசியா மற்றும் பசிபிக் தீவுகள் மற்றும் ஆஸ்திரேலியாவை கொண்டது. இதில் 17 வகை யான மரங்கள் உள்ளன. 40மீட்டர் வரை உயரம் வளரக்கூடியது. கடற்கரையோரங்களில் உள்ள நிலங்களுக்கு மண் அரிமானத்தை தடுக்க காற்று தடுப்பானாக சவுக்கு மரங்கள் நடப்படுகின்றன.
காகித உற்பத்திக்கு தேவையான கூழ் சவுக்கு மரத்தில் இருந்து மூலப் பொருள் யாக உள்ளது.இதனுடைய தேவைகள் நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே இருக்கிறது.புள்ளி விவரங்களுடன் சொல்ல வேண்டுமானால் ஓரு நாளைக்கு 3500டன் மரங்கள் தேவைப்படுகின்றன.
இதற்கான சவுக்கு சாகுபடி செய்யும் விவசாயிகளுடன் காகித ஆலைகள் ( சேஷசாயி ஆலை , புகளூர் காகித ஆலை ) ஒப்பந்தம் செய்ய படுகிறது. சவுக்கு மரங்களில் நைட்டிஜன தக்க வைக்கும் ( பிராங்கியா) FRANKIA SPECIES) வேர்மூடிச்சுகளை கொண்டு அவை நைட்டிஜனை தக்க வைத்து மண்ணின் வளத்தினை அளவை கூட்டுகிறது.
இத்தகைய மரங்களை நாற்று மூலமாகவும் நடவு செய்ய படுகின்றன. இது நல்ல வருமானத்தை அள்ளி தரக்கூடிய ஓருவகை மரப்பயிர்
அக்ரி சு.சந்திர சேகரன் வேளாண் ஆலோசகர் அருப்புக்கோட்டை.
