• June 4, 2025

தீபாவளி கூட்ட நெரிசலை தவிர்க்க முன்பதிவில்லா சிறப்பு ரெயில்கள் இயக்கம்

 தீபாவளி கூட்ட நெரிசலை தவிர்க்க முன்பதிவில்லா சிறப்பு ரெயில்கள் இயக்கம்

தீபாவளிக்கு சொந்த ஊர் செல்லும் பயணிகள் நலன் கருதி, சென்னையில் இருந்து முன்பதிவு இல்லாத மூன்று சிறப்பு ரெயில்கள் இன்று இரவு இயக்க தெற்கு ரெயில்வே முடிவு செய்துள்ளது.

அதன்படி, சென்னை எழும்பூர்-திருச்சி சிறப்பு ரெயில் (06155) அக்டோபர்.30 இன்று இரவு 9.10 மணிக்கு புறப்பட்டு நாளை அதிகாலை 5.45 மணிக்கு திருச்சி சென்று அடையும். அதாவது, தாம்பரம், செங்கல்பட்டு, மதுராந்தகம், மேல்மருவத்துார், திண்டிவனம், விழுப்புரம், பண்ருட்டி, கடலுார், பரங்கிபேட்டை, சிதம்பரம், சீர்காழி, வைத்தீஸ்வரன்கோவில், மயிலாடுதுறை, ஆடுதுறை, கும்பகோணம், பாபநாசம், தஞ்சாவூர் வழியாக திருச்சி சென்று சேரும்.

சென்னை தாம்பரத்தில் இருந்து இன்று இரவு 12.30 மணிக்கு புறப்பட்டு விழுப்புரம், விருதாச்சலம், அரியலூர் வழியே திருச்சிக்கு சிறப்பு ரெயில் (06157) இயக்கப்படும்.

சென்னை சென்ட்ரலில் இருந்து இன்று இரவு 10.10 மணிக்கு அரக்கோணம், திருப்பத்தூர், திருப்பூர் வழியே கோவை போத்தனூருக்கு சிறப்பு ரெயில் (06159) இயக்கப்படும்.

திருச்சி-தாம்பரம் சிறப்பு ரெயில் நாளை அக்டோபர்.31 பிற்பகல் 12 மணிக்கு திருச்சியிலிருந்து புறப்பட்டு அன்று இரவு 8.45 மணிக்கு தாம்பரம் வந்தஅடையும். என்பது குறிப்பிடத்தக்கது.

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *