தூத்துக்குடியில் குடியரசு தின விழா; ஆட்சியர் லட்சுமிபதி தேசிய கொடி ஏற்றினார்.
தூத்துக்குடி தருவை மைதானம் விளையாட்டு அரங்கத்தில் 75வது குடியரசு தின விழா நடைபெற்றது. மாவட்ட ஆட்சித் தலைவர் கோ. லட்சுமிபதி தேசிய கொடியை ஏற்றினார். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எல். பாலாஜி சரவணன் முன்னிலையில் காவல்துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார்..
பின்னர் அரசுத்துறையில் சிறப்பாக பணியாற்றிவர்களுக்கு நற்சான்றிதழ்களை ஆட்சியர் லட்சுமிபதி வழங்கினார். மேலும், பல்வேறு துறைகளின் சார்பில் 45 பயனாளிகளுக்கு ரூ.1கோடியே 65லட்சத்து 55ஆயிரத்து 936 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.விழாவில் பள்ளி மாணவ, மாணவியர்களின் கண்கவர் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது.
தூத்துக்குடி மாவட்டத்தில் 10 வருடங்கள் சிறப்பாக பணிபுரிந்த 80 காவல்துறையினருக்கு தமிழ்நாடு முதலமைச்சரின் பதக்கம் வழங்கப்பட்டது. மேலும் மாவட்டத்தில் சிறப்பாக பணிபுரிந்த ஸ்ரீவைகுண்டம் உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் மாயவன், சாத்தான்குளம் உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் அருள் ஆகியோர் உட்பட காவல்துறை ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள், அமைச்சுபணியாளர்கள் உட்பட 79 காவல்துறையினருக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது.
தமிழ்நாடு முதலமைச்சர் பதக்கம், மாவட்ட ஆட்சியரின் பாராட்டு சான்றிதழ் பெற்ற காவல்துறையினரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எல். பாலாஜி சரவணன் பாராட்டினார்.