• June 7, 2025

ஊரும்… உணவும்

 ஊரும்… உணவும்

தமிழ்நாட்டின் பல்வேறு ஊர்களில் கிடைக்கும் பிரபலமான உணவு வகைகளை பார்க்கலாம்…

ராஜ பாளையம்−கேசரி

சங்கரன்கோவில்−பால்பன்

ஆற்காடு−மக்கன் பேடா

திருவையாறு−அசோகா

கும்பகோணம்−கடப்பா

கன்னியாகுமரி−ரசவடை

பிரானூர் பார்டர்

(குற்றாலம்−புரோட்டா

சிவகிரி(நெல்லை)−சீனிமிட்டாய்

திண்டுக்கல்−சேர்மிட்டாய்

பசுபதிபாளையம்−கைமுறுக்கு

காஞ்சிபுரம்−கோவில் இட்லி

குன்னூர்−வர்க்கி

தென்காசி−மட்டன்கொத்து

கீழக்கரை−தொதல்வா

ராமநாதபுரம்−வெள்ளரி பஜ்ஜி

பேராவூரணி−வீச்சு புரோட்டா

சைதாப்பேட்டை−வடைகறி

மாம்பலம்−உசிலி

கும்பகோணம்−திருமால்வடை

தஞ்சை−தேங்காய் சொதி

மயிலாப்பூர்−தவலைவடை

சௌகார்பேட்டை−சீனாதோசை

வெப்படை−தட்டுவடை நொறுக்கல்

ஒரத்தநாடு−சந்திரகலா

ஆட்டையாம்பட்டி −முறுக்கு

கிருஷ்ணகிரி−புட்டுப்பணியாரம்.

மார்த்தாண்டம்−புளிச்சேரி

பட்டுக்கோட்டை−பாதாம்பால்

திருவாரூர்−பருத்தி அல்வா

கும்பகோணம்−பதிர்பேணி

கடம்பூர்−பருப்புபோளி

தி.நகர்−பகோடாகறி

தேன்கனிக்கோட்டை−ஒப்பட்டு

காவேரிப்பட்டினம்−வேர்க்கடலை நிப்பட்

உடன்குடி−கருப்பட்டி

திசையன்விளை−மஸ்கோத் அல்வா

நாகர்கோவில்−முந்திரிக்கொத்து

புன்னை நல்லூர்−குச்சிமுறுக்கு

சிதம்பரம்−கத்திரிகொத்சு

மந்தைவெளி−காசிஅல்வா

கோவில்பட்டி−கடலைமிட்டாய்

புதுச்சேரி−பிரெஞ்ச் ஆம்லெட்

திருவானைக்காவல்−ஜோடி நெய்தோசை

ராயபுரம்−இளந்தோசை

களியக்காவிளை−இலையப்பம்

தக்கலை−உப்பேரி

கொருக்குப்பேட்டை −அத்தோ

அம்மன்புரம்−பட்டாணி காரச்சேவு

அருப்புக்கோட்டை−சீவல்

ராமநாதபுரம்−பால்சர்பத்

திருச்சி−பட்டணம் பக்கோடா

பேரணாம்பட்டு−அங்கூர்பூந்தி

செஞ்சி−முட்டைமிட்டாய்

நீடாமங்கலம்−பால்திரட்டு

காரைக்குடி−கந்தரப்பம்

மதுரை−அவிச்ச டீ, இளநீர் சர்பத், ஜிகர்தண்டா,கறிதோசை,முக்குழிப் பணியாரம்,முட்டைஇட்லி,முட்டைபன், முள்முருங்கை வடை.

திருநெல்வேலி அல்வாவின் பூர்வீகம் சொக்கம்பட்டி. வரலாற்றின்படி பார்த்தால், “சொக்கம்பட்டி அல்வா” என்றே அமைந்திருக்க வேண்டும்.

சொக்கம்பட்டி அல்வா, திருநெல்வேலி அல்வா ஆனது எப்படி?

தென்காசி−புளியங்குடி சாலையிலுள்ளது சொக்கம்பட்டி. இவ்வூர் ஒருகாலத்தில் ஜமீனாக இருந்துள்ளது.சொக்கம்பட்டி ஜமீனில், குதிரைகள் அதிகமிருந்தன. குதிரைகளுக்குத் தரமான உணவளிக்க, வடஇந்தியர்கள், வரவழைக்கப்பட்டு, குடியமர்த்தப்பட்டனர். இவர்கள் பராமரிப்பில் குதிரைகள் நன்கு கொழுத்து, போராற்றலுடன் வளர்ந்தன. அவா்கள் குதிரைகளுக்கு அளித்த உணவுவகைகளுள் ஒன்று சொக்கம்பட்டி அல்வா.

காலப்போக்கில், சொக்கம்பட்டி ஜமீன் அழிந்தவுடன், இவர்களுக்கு வேலை இல்லாமல் போயிற்று. ஆகவே, இவர்கள் திருநெல்வேலியில் குடியேறினர். இவா்களில் ஒருவரான, ராஜஸ்தானைச் சேர்ந்த கிருஷ்ணசிங் என்பவா் மகன் பிஜிலிசிங் என்பவா்தான், குதிரைகளுக்கான சொக்கம்பட்டி அல்வாவை, தாமிரபணி நீர்கொண்டு, திருநெல்வேலியில் மக்களுக்காகத் தயாரித்தார்.அந்த அல்வாவைச் சுவைத்த மக்கள், அதன் சுவைக்கு அடிமையாயினர். இவா்தான் இருட்டுக்கடை அல்வா கடையை நிறுவினார்.நாளடைவில்,இந்திய அளவில் புகழ்பெறவே, சொக்கம்பட்டி அல்வா, திருநெல்வேலி அல்வா ஆக, பெயர் மாறியது.

திருநெல்வேலி கீழரதவீதியில்,இருட்டு கடையில், தற்போதும், இவருடைய மூன்றாந் தலைமுறை வாரிசுகள், அல்வா தொழிலை, மேற்கொண்டு வருகின்றனா். எனவே, திருநெல்வேலிக்குரிய பூர்வீக இனிப்பு அல்வா அன்று; சீனி மிட்டாயே

தகவல் தொகுப்பு: காசி விஸ்வநாதன்-திருநெல்வேலி –

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *