• June 7, 2025

நுரையிரல் சுத்தம் செய்யும் ஐம்புலம் சூரணம் எப்படி செய்யலாம்?

 நுரையிரல் சுத்தம் செய்யும் ஐம்புலம் சூரணம் எப்படி செய்யலாம்?

புகை பிடிப்பவர்கள் மற்றும் அடிக்கடி சளி பிடிக்கும் பாதிப்பு உள்ளவர்கள் நுரையிரல் சுத்தம் செய்யும் ஐம்புலம் சூரணம் எப்படி செய்யலாம் என்பது பற்றிய செய்முறை விளக்கம்

 தேவையான மூலப்பொருட்கள்

1. சித்தரத்தை – 50 கிராம்.

2. தாளிசபத்திரி – 50 கிராம்

3. அதிமதுரம் – 25 கிராம்
4. சுக்கு – 50 கிராம்
5. சாதிக்கோஷ்டம் – 25 கிராம்
6. ஆடாதோடை – 10 கிராம்


 மேற்கூறிய மூலப்பொருட்கள் அனைத்தையும் சுத்தம் செய்து கொள்ளுங்கள்

 தனி தனியாக நன்கு வருத்து கொள்ளுங்கள்

 தயார் செய்த அனைத்தையும் ஒன்றாக சேர்த்து அரைத்து கொள்ளுங்கள்

 அரைத்த மூலபொருட்கள் அனைத்தையும் சலித்து தயார் செய்து காற்று படாமல் வைத்து கொள்ளுங்கள்

 சாப்பிடும் முறை

 200மில்லி தண்ணீரை கொதிக்க வைத்து அதில் 1 ஸ்பூன் அளவு தயார் செய்த பொடியை கலந்து நன்கு கொதிக்க வைத்து 2 நிமிடத்தில் அனைத்து விடவும்

 சூடான நிலையில் டீ போல குடிக்க வேண்டும் சுவைக்கு தேன் கலந்து கொள்ளலாம்

 இத்தனை தினமும் காலை மற்றும் இரவு என இரு வேளை எடுக்கலாம்

 இதை உணவுக்கு பின் அல்லது உணவுக்கு முன் என எப்படி வேண்டும் என்றாலும் எடுக்கலாம் அது உங்கள் உடல் நிலை சர்க்கரை

 இதனால் என்ன மருத்துவ நன்மை கிடைக்கும்???

இந்த சூரணம் முழுக்க முழுக்க நுரையிரல் சுத்தம் செய்யும் ஒரு சக்தி வாய்ந்த மூலிகை

இதனால் சளி,ஆஸ்துமா,இருமல்,மூக்கடைப்பு,நுரையிரல் அலர்ஜி,சுவாச குறைபாடு,மூச்சு வாங்குதல்,சுவாச முறைபாடு என அனைத்துக்கும் ஒரு வர பிரசாதம்

இதனை தேவை படும் நாள் வரை எடுத்தால் போதும்
புகை பிடிப்பவர்கள் வாரம் 2 முறை இதை எடுத்து கொண்டால் புற்றுநோய் பாதிப்பில் இருந்து தப்பிக்கலாம்

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *