நல்லகண்ணு மருமகன் முதலாம் ஆண்டு நினைவு நாளில் கட்சியினர் அஞ்சலி

இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் தூத்துக்குடி வடக்கு மாவட்ட முன்னாள் செயலாளரும் நல்லக்கண்ணுவின் மருமகனுமான எஸ்.அழகுமுத்து பாண்டியன் முதலாம் ஆண்டு நினைவு தினம் இன்று கடைபிடிக்கப்பட்டது.
கோவில்பட்டி இந்திய கம்யூனிஸ்டு கட்சி அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்த அழகுமுதுபாண்டியன் உருவபடத்துக்கு நகர செயலாளர் சரோஜா, தாலுகா செயலாளர் பாபு, மாவட்ட நிர்வாக குழு உறுப்பினர் சேதுராமலிங்கம், ஏ.ஐ.டி.யு.சி.மாநில தலைவர் காசி விஸ்வநாதன்,மாவட்ட குழு உறுப்பினர்கள் கண்ணம்மா,ராமக்கிருஷ்ணன், ஏ.ஐ.டி.யு.சி பஞ்சாலை தொழிற்சங்க தலைவர்கள் பரமறாஜ்ம் குருசாமி, ரன்முகவேல், மாதர் சம்மேளனம் விஜயலட்சுமி ஆகியோர் மாலை அணிவித்தும் மலர் தூவியும் அஞ்சலி செலுத்தினார்கள்.
