• June 7, 2025

ஆதரவற்றோர் மனநல காப்பகத்தில் ஜே.சி.ஐ. சார்பில் அன்னதானம்

 ஆதரவற்றோர் மனநல காப்பகத்தில் ஜே.சி.ஐ.  சார்பில் அன்னதானம்

கோவில்பட்டி அருகே உள்ள முடுக்குமீட்டான்பட்டி ஆக்டிவ் மைன்ட்ஸ் பெண்கள் மனநல காப்பகத்திற்கு ஜே.சி.ஐ. அமைப்பின் சார்பில் மனநலம் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு தேவையான மளிகை சாமான்கள், பிஸ்கட் மற்றும் அத்தியாவசிய பொருட்கள் வழங்கி மதிய உணவை வழங்கினர்.

 இதேபோல் செமபுதூரில் உள்ள ஆக்டிவ் மைண்ட் ஆண்கள் மனநல காப்பகத்திற்கும் தேவையான பொருட்கள் மற்றும் மதிய உணவினை வழங்கினர்.

காப்பகத்தில் இருக்கும் பெண் ஒருவர் சிறப்பாக பாடல் பாடி  வரவேற்றார். நிகழ்ச்சியில் ஜே.சி.ஐ. தலைவர் தீபன்ராஜ் தலைமை தாங்கினார். பொருளாளர் விஜய்கண்ணன் திட்டஇயக்குனராக செயல்பட்டார். காப்பக நிர்வாகி தேன்ராஜா மற்றும் ஊழியர்கள் பொருட்களை பெற்றுக்கொண்டனர், முடிவில் ஜே.சி.ஐ செயலாளர் சூர்யா நன்றி கூறினார்.

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *