கோவில்பட்டியில் மகளிர்தின விழா

கோவில்பட்டி பாக்யா மஹாலில் ஜெய்கிறிஸ் அறக்கட்டளை சார்பாக உலக மகளிர் தினம் கொண்டாடப்பட்டது..
சிறப்பு விருந்தினராக முன்னாள் அமைச்சர் கடம்பூர் செ ராஜு கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார். ஜெய்கிறிஸ் அறக்கட்டளை நிறுவனர் வழக்கறிஞர் ஜெயஸ்ரீ கிறிஸ்டோபர் வரவேற்று பேசினார். துணை போலீஸ் கண்காணிப்பாளர் வெங்கடேஷ், ரோட்டரி கிளப் முன்னாள் கவர்னர் விநாயகா ரமேஷ், அபிராமி குழுமம் இயக்குனர் அபிராமி முருகன், ஆசியா பாம்ஸ் பாபு , கணேஷ் பேக்கரி நிறுவனர் ரவி மாணிக்கம், அட்வகேட் சந்திரசேகர் மருத்துவர் சீனிவாசகன் ,முருகேஸ்வரி பில்டர்ஸ் செண்பகய்யா, பி.டி.ஓ.முத்துகுமார் , கிஃப்ட் கன்ஸ்ட்ரக்ஸ் டேவிட்சன் , எஸ்.எஸ்.டி.எம். கல்லூரி செயலாளர் கண்ணன், முதல்வர் முனைவர் செல்வராஜ், ஐ.எஸ்.சி.யு.எப். க.தமிழரசன், திருவள்ளுவர் மன்ற தலைவர் கருத்தப்பாண்டி, ஸ்மார்ட் ஒன் விஜி ,
பி.எஸ்.ஆர்.ஆர்.பொறியியல் கல்லூரி முதல்வர் பாலசுப்பிரமணியம், அட்வகேட் ஷாகிர் உசேன், மைக்ரோபாயிண்ட் நிறுவனர் ஆர்ம்ஸ்ட்ராங், மருத்துவர் சுஜாதா, தலைமையாசிரியர்கள் பத்மா பாபு, மணிமதி சேர்மசெல்வி மருத்துவர்கள் காளீஸ்வரி மற்றும் அபிநயா கோ.வெ.நா.கல்லூரி முதல்வர் சாந்தி மகேஸ்வரி நகர்மன்ற முன்னாள் துணை தலைவர் லதா ராபின்சன், பஞ்சாயத்து தலைவர் பவானி பள்ளி தாளாளர்கள் அனிஸ் பாத்திமா, மற்றும் வித்யா பாலாஜி காவல்துறை ஆய்வாளர்கள் பத்மாவதி, மங்கையர்க்கரசி, சுகாதேவி கோவை வழக்கறிஞர் மது சேவியர் , சந்திரா மில் ஸ்டோர் மந்திர மூர்த்தி மற்றும் பலர் கலந்து கொண்டனர்,.
சிறப்பு விருந்தினருக்கும் வாழ்த்துரை வழங்கியோருக்கும் ஜெய்கிறிஸ் அறக்கட்டளையின் பொருளாளர் ராஜம் தாம்ஸன் நினைவு பரிசும் பொன்னாடையும் போர்த்தி சிறப்பித்தார்.200க்கும் மேற்பட்ட பெண்களுக்கு “”தையல்நாயகி 2023″” என்ற விருது வழங்கப்பட்டது. பள்ளி கல்லூரி மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது . ஏழை எளிய மக்கள் பலருக்கு இலவச நலத்திட்டங்கள் வழங்கப்பட்டது.. விழாவினை முனைவர் முருகசரஸ்வதி முனைவர் மாணிக்கராஜ்ஆகியோர் தொகுத்து வழங்கினார்கள்.
