• June 7, 2025

ஆதார் சேவைகளை பெற அஞ்சலகங்களை அணுகலாம்; பொதுமக்களுக்கு அழைப்பு

 ஆதார் சேவைகளை பெற அஞ்சலகங்களை அணுகலாம்; பொதுமக்களுக்கு அழைப்பு

கோவில்பட்டி அஞ்சல் கோட்டம் அஞ்சலக கண்காணிப்பாளர் சு.சுரேஷ் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

மத்திய மற்றும் மாநில அரசின் பல்வேறு சேவைகளை பெற ஆதார் என் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் பலர் ஆதார் சேர்க்கை மற்றும் ஆதாரில் முகவரி மாற்றம், பெயர் மாற்றம்,  திருத்தம் போன்ற சேவைகளை சிரமம் இன்றி பெறும் வகையில் அஞ்சலகங்களில்  ஆதார் சேவை மையங்கள் செயல்பட்டு வருகின்றன.

கோவில்பட்டி அஞ்சல் கோட்டத்தில் கோவில்பட்டி, சங்கரன்கோவில் மற்றும் தென்காசி தலைமை அஞ்சலகங்கள் மற்றும் துணை அஞ்சலகங்களில் ஆதார் சேவை மையங்கள் செயல்பட்டு வருகின்றன.

புதிய ஆதார் சேர்க்கை மற்றும் திருத்தங்களுக்கான சிறப்பு முகாம்  கோவில்பட்டி அஞ்சல் கோட்டத்தில் கோவில்பட்டி , சங்கரன்கோவில், தென்காசி தலைமை அஞ்சலகங்கள் மற்றும் 29 அடையாளப்படுத்தப்பட்ட துணை  அஞ்சலகங்களில் 18.1.2023 முதல் l 4.2.2023 வரை நடைபெறுகிறது.

மேலும்  சிறப்பு ஆதார்  கவுண்ட்டர்கள் பொதுமக்கள் வசதிக்காக மேற்கண்ட தினங்களில் செயல்படுத்தப்பட உள்ளன. பொதுமக்கள் இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்தி கொள்ளவேண்டும்.

இவ்வாறு கோவில்பட்டி அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் சு.சுரேஷ் கூறி இருக்கிறார்.

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *