சாத்தூர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்தில் 2 பேர் பலி

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே கனஞ்சாம்பட்டியில் சிவகாசியை சேர்ந்த மாரியப்பன் என்பவருக்கு சொந்தமான
பட்டாசு ஆலையை விஸ்வநத்தத்தை சேர்ந்த கந்தசாமி என்பவர் குத்தகைக்கு எடுத்து கடந்த நான்கு ஆண்டுகளாக நடத்தி வருகிறார். சுமார் 50 க்கும் மேற்பட்ட அறைகள் உள்ளன.அதில் 70 க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பேன்சி ரக பட்டாசு தயாரிப்பில் ஈடுபட்டு வந்தனர்.
இன்று வழக்கமாக பட்டாசு ஆலைக்கு சாத்தூர் பகுதியில் உள்ள படந்தால்,அன்பின்நகரம்,சத்திரப்பட்டி பகுதிகளில் இருந்து தொழிலாளர்கள் வந்தனர். காலையில் பணிகள் முடிந்து மதியம் சாப்பிட்டனர். இந்த நிலையில் மீன்டும் பட்டாசு தயாரிக்கு பணியில் விறுவிறுப்பாக பணியாளர்கள் ஈடுபட்ட வந்த நிலையில் மாலை 3.30 மணியளவில் மூலப்பொருள் உராய்வினால் திடீரென வெடி விபத்து ஏற்பட்டது.
இந்த வெடி விபத்தில் பட்டாசு தயார் செய்யும் பத்துக்கும் மேற்பட்ட அறைகள் இடிந்து தரைமட்டமானது.
இந்த விபத்தில் சாத்தூர் அருகே சந்திரப்பட்டியை சேர்ந்த குமார் மகள் முனீஸ்வரி , அடையாளம் தெரியாத ஆண் ஒருவர் ஆகியோர் சம்பவ இடத்தில் உடல் கருகி பலியானார்கள்.
மேலும் 10 பேர் படுகாயம் அடைந்தனர் அவர்களில் படந்தாலை சேர்ந்த மாரியப்பன் (42),அன்பின் நகரத்தை சேர்ந்த தங்கராஜ் (49), ஜெயராஜ் (72),குருசாமி (47),குருசாமி(60),முருகன் (55) ஆகியோர் சாத்தூர் அரசு மருத்துவ மனையிலும் மீதி நான்கு பேர் சிவகாசி மருத்துவமனையிலும் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் கட்டிட இடி பாடுகளிலில் தொழிலாளர்கள் சிக்கியுள்ளனரா என ஜெசிபி இயந்திரம் வைத்து இடிபாடுகளை அகற்றி தீயணைப்பு படை வீரார்கள் தேடிபார்த்து வருகின்றனர்.
மேலும் பட்டாசுகள் தொடர்ந்து வெடித்து வந்ததால் உடனடியாக மீட்பு பணியை செய்ய முடியவில்லை
சம்பவம் நடந்த இடத்தை விருதுநகர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சீனிவாசப்பெருமாள் பார்வையிட்டு . விபத்து குறித்து விசாரணை செய்தார். இந்த சம்பவம் தொடர்பாக வெம்பக்கோட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
விபத்து நடந்த பட்டாசு ஆலையை பார்வையிட்ட பின் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சீனிவாச பெருமாள் செய்தியாளர்களிடம் கூறுகையில், “-
இந்த ஆலையில் உரிமம் இல்லாத பட்டாசுகளை தயார் செய்திருந்தால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். விபத்து நடந்த ஆலையின் உரிமம் நடை முறையில் உள்ளதா என விசாரணை செய்து வருகிறோம்..உரிமம் இல்லாமல் பட்டாசு உற்பத்தியில் ஈடுபடுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். இதற்கான ஆய்வுகளை தீவிர படுத்தப்படும்”.என்று தெரிவித்தார்.
