• June 8, 2025

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் இரட்டை இலை சின்னத்தில் அ.தி.முக. போட்டி; டி.ஜெயக்குமார் பேட்டி

 ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் இரட்டை இலை சின்னத்தில் அ.தி.முக. போட்டி; டி.ஜெயக்குமார் பேட்டி

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் களமிறங்க அரசியல் கட்சிகள் மும்முரமாக செயல்பட்டு வருகின்றன. இதுதொடர்பாக, அ.தி.மு.க. மூத்த நிர்வாகிகள் டி.ஜெயக்குமார் தலைமையிலான குழுவினர் நேற்று ஜி.கே.வாசனை சந்தித்து பேசினார். தொடர்ந்து , ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அ.தி.மு.க. போட்டியிடுவதாக தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் அறிவித்தார்.

இந்நிலையில், ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் முன்னாள் அமைச்சர் கே.வி.ராமலிங்கம் போட்டியிட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

 2021ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணியில் த.மா.கா. போட்டியிட்ட நிலையில், தற்போதைய இடைத்தேர்தலில் அ.தி.மு.க. போட்டியிடுகிறது.

இந்நிலையில், இரட்டை இலை சின்ன விவகாரத்தில் எந்த பிரச்சினையும் இல்லை. நிச்சயம் இரட்டை இலையில் தான் அ.தி..மு.க. போட்டியிடும்  என்று முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

மேலும் அவர், “ஈரோடு கிழக்கு தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளரை  தற்போதைய சூழ்நிலையில் அ.தி.மு.க. வேட்பாளரால் தான் எதிர்கொள்ள முடியும், இந்த தேர்தலில் அதிமுக மகத்தான வெற்றி அடையும். இடைத்தேர்தலில் பா.ஜனதா போட்டியிடுமா என்ற யூகங்களுக்கு பதில் அளிக்க முடியாது” என்றார்.

தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே..வாசன் கூறுகையில், ஈரோடு கிழக்கு தொகுதியில் போட்டியிட அ.தி.மு.க.வின் விருப்பத்தை த.மா.கா.ஏற்றுக்கொண்டது; தமிழக மக்களின் நலனுக்காகவும், கூட்டணி கட்சி வேட்பாளரின் வெற்றிகக்காகவும் அதிமுகவின் விருப்பத்தை த.மா.கா.ஏற்றுக்கொண்டுள்ளது,. தேர்தல் பணியாற்றி, கூட்டணி கட்சி வேட்பாளரின் வெற்றிக்கு உறுதுணையாக இருபோம்” என்று குறிப்பிட்டார்.


Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *