பெட்ரோல் பங்க் அருகே கார் தீப்பிடித்து நாசம்

திண்டுக்கல் – கரூர் சாலையில் பெஸ்கி கல்லூரி அருகே தனியாருக்கு சொந்தமான பெட்ரோல் பங்க் உள்ளது. இந்த பங்க்கில் நேற்று மதியம் எரியோடு கோவிலூர் அடுத்த தோப்புப்பட்டியைச் சேர்ந்த மாணிக்கம் என்பவர் காருக்கு பெட்ரோல் போட வந்தார்.
முன்பாக வேறுசில வாகனங்கள் நின்றிருந்ததால் அந்த கார் காத்திருந்தது. அப்போது திடீரென காரின் பின்பகுதியில் இருந்து புகை கிளம்பியது. உடனே சுதாரித்த பங்க் ஊழியர்கள் வேனை சற்று தூரம் வெளியே நகர்த்தி கொண்டு வந்தனர். டிரைவரும் கீழே இறங்கியநிலையில் திடீரென கார் தீப்பற்றி எரியத்தொடங்கியது.
சுமார் 20 நிமிடங்கள் தொடர்ந்து எரிந்தநிலையில் அங்கிருந்தவர்கள் அணைக்க முயன்றும் முடியவில்லை. பின்னர் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனை அடுத்து திண்டுக்கல் தீயணைப்பு நிலைய ஊழியர்கள் உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்து தீயை கட்டுப்படுத்தினர். இதனால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.
