ஈரோடு கிழக்கு தொகுதி இடைதேர்தலில் அ.தி.மு.க. கூட்டணி சார்பில் த.மா.கா.போட்டியா? ஜி.கே.வாசனுடன் முன்னாள் அமைச்சர்கள் ஆலோசனை

காங்கிரஸ் எம்.எல்.ஏ. ஈவெரா திருமகன் மரணம் அடைந்ததையடுத்து காலியாக இருக்கும் ஈரோடு கிழக்கு தொகுதிக்கு பிப்ரவரி மாதம் 27ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என்றும், வாக்கு எண்ணிக்கை மார்ச் 2ம் தேதி நடைபெறும் என்றும் இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதையடுத்து தேர்தல் நடத்தை விதிமுறைகள் ஈரோடு மாவட்டத்தில் அமலுக்கு வந்துள்ளன. இந்நிலையில் ஈரோடு சட்டசபை தொகுதி இடைத்தேர்தலில், அ.தி.மு.க. கூட்டணி சார்பாக தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி போட்டியிடவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது..
தொகுதி ஒதுக்கீடு தொடர்பாக அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர்கள் டி.ஜெயக்குமார், , கோகுல இந்திரா, வளர்மதி, பெஞ்சமின் ஆகியோர் தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசனை சந்தித்து பேசினார்கள். அப்போது தேர்தலில் த..மா.கா.சார்பில் வேட்பாளரை நிறுத்துவது தொடர்பாக ஆலோசிக்கப்பட்டது.
. 2021 சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணியில் த.மா.கா. சார்பில் யுவராஜ் ஈரோடு கிழக்கு தொகுதியில் போட்டியிட்டார். அதை மனதில் கொண்டு ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் த.மா.கா. போட்டியிட வாய்ப்பு வழங்கப்படுவதாக தெரிகிறது.
. கடந்த தேர்தலில் த.மா.கா. வேட்பாளர் யுவராஜ், இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டிருந்தார். தற்போது இரட்டை இலை சின்னத்தை ஒதுக்குவதில் சிக்கல் உள்ளதால் சுயேச்சை சின்னத்தில் போட்டியிட வேண்டிய நெருக்கடி த.மா.கா.வுக்கு உள்ளது.
கடந்த 2021-ம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலின்போது ஈரோடு கிழக்கு தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் திருமகன் ஈவெரா, தனக்கு அடுத்தபடியாக வந்த த.மா.கா. வேட்பாளர் யுவராஜாவை 8,904 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்து வெற்றி பெற்றார்.
ஒட்டு விவரம்
திருமகன் ஈவெரா (காங்கிரஸ்), – 67,300
யுவராஜா (தமாகா) – 58,396
கோமதி (நாம் தமிழர் கட்சி) – 11,629
ராஜகுமார் (மக்கள் நீதி மய்யம்) – 10,005
நோட்டா – 1,546
முத்து குமரன் (அமமுக) – 1,204
