பி.எஸ்.என்.எல் ஒய்வூதியதாரர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்

அகில இந்திய பி.எஸ்.என்.எல். ஓய்வூதியதாரர் சங்கத்தின் தமிழ் மாநில கிளை முடிவின்படி சென்னை கூட்டுறவு சொசைட்டி நிர்வாகம் உறுப்பினர்களுக்குச் சேர வேண்டிய நிலுவைத் தொகையை உடனே தர வலியுத்தி தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
அகில இந்திய துணைத் தலைவர் எஸ் மோகன்தாஸ் சிறப்புரை ஆற்றினார்.அகில இந்திய பிஎஸ்என்எல் தொலை தொடர்பு ஊழியர் சங்கம் கோவில்பட்டி கிளை தலைவர் மீனாட்சிசுந்தரம் தலைமை தாங்கினார்., கிளை செயலர் முத்துராமலிங்கம் வரவேற்று பேசினார். பிஎஸ்என்எல் ஊழியர்கள் சங்கம், .கிளை செயலாளர் பாலசுப்பிரமணியன் பாலகிருஷ்ணன் முன்னிலை வகித்தார். அகில இந்திய உதவி தலைவர் மோகன்தாஸ் சிறப்புரை ஆற்றினார்.

