கோவில்பட்டியில் பா.ஜனதா பொதுக்கூட்டம்

முன்னாள் பிரதமர் வாஜ்பாய் 98-வது பிறந்ததினத்தை முன்னிட்டு தேசிய நல்லாட்சி தின பொதுக்கூட்டம் கோவில்பட்டி கிருஷ்ணன்கோவில் அருகில் நடைபெற்றது.
பாரதிய ஜனதா கட்சியின் தூத்துக்குடி வடக்கு மாவட்ட பிரசாரபிரிவு சார்பில் இந்த கூட்டம் நடத்தபட்டது, கூட்டத்துக்கு பிரசார பிரிவின் மாவட்ட தலைவர் லட்சுமணக்குமார் தலைமை தாங்கினார்.துணை தலைவர் உத்தண்டு ராமன் முன்னிலை வகித்தார்,.
பா.ஜனதா மாவட்ட தலைவர் வெங்கடேசா சென்னகேசவன், மாநில பொது செயலாளர் பொன் பாலகணேஷ், பிரசார பிரிவு மாநில செயலாளர் விக்னேஷ்,, மாவட்ட துணை தலைவர்கள் பாலமுருகன் , பலமமுருகேசன், எஸ்.ராஜ்குமார் , பொதுசெயலாளர் வேல்ராஜா,பொருளாளர் கணேஷ் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டனர்..

