செண்பகவல்லி அம்மன் கோவிலில் திருக்குறிப்பு தொண்டர் நாயன்மாருக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை
கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் உடனுறை பூவனநாத சுவாமி கோவிலில் திருக்குறிப்பு தொண்டர் நாயனார் மகா அபிஷேக விழா நடந்தது. இதையொட்டி அதிகாலை 5 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு திருப்பள்ளி எழுச்சி, திருவனந்தல் ஒலித்த பூஜைகள் நடந்தன. தொடர்ந்து மூலவர் சுவாமி, அம்மனுக்கு அபிஷேகம் மற்றும் அலங்கார தீபாராதனை நடந்தது. பின்னர் காலை 10 மணிக்கு மேல் 63 நாயன்மார்களில் ஒருவரான திருக்குறிப்பு தொண்டர் நாயன்மாருக்கு சிறப்பு அபிஷேகங்களும், அலங்கார தீபாராதனைகளும் நடந்தன. விழாவில் ஸ்ரீ திருக்குறிப்பு […]