• May 21, 2024

Month: April 2024

கோவில்பட்டி

செண்பகவல்லி அம்மன் கோவிலில் திருக்குறிப்பு தொண்டர் நாயன்மாருக்கு சிறப்பு அபிஷேகம்,  தீபாராதனை

கோவில்பட்டி  செண்பகவல்லி அம்மன் உடனுறை பூவனநாத சுவாமி கோவிலில் திருக்குறிப்பு தொண்டர் நாயனார் மகா அபிஷேக விழா நடந்தது.  இதையொட்டி அதிகாலை 5 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு திருப்பள்ளி எழுச்சி, திருவனந்தல் ஒலித்த பூஜைகள் நடந்தன. தொடர்ந்து மூலவர் சுவாமி, அம்மனுக்கு அபிஷேகம் மற்றும் அலங்கார தீபாராதனை நடந்தது. பின்னர் காலை 10 மணிக்கு மேல் 63 நாயன்மார்களில் ஒருவரான திருக்குறிப்பு தொண்டர் நாயன்மாருக்கு சிறப்பு அபிஷேகங்களும், அலங்கார தீபாராதனைகளும் நடந்தன. விழாவில் ஸ்ரீ திருக்குறிப்பு […]

செய்திகள்

ஜமால் முஹம்மது கல்லூரி முன்னாள் மாணவர்கள் சிங்கப்பூரில் நடத்திய ‘ஆற்றல் வளர்க்க விரும்பு’

தமிழ்மொழி விழா 2024இன் ஓர் அங்கமாக, வளர்தமிழ் இயக்கத்தின் ஆதரவில் ஜமால்  முஹம்மது கல்லூரி முன்னாள் மாணவர்கள் சங்கம் (சிங்கப்பூர் கிளை) ஏற்பாட்டில் உமறுப்புலவர் தமிழ்மொழி நிலைய உள்ளரங்கில், 20 ஏப்ரல் 2024 அன்று “ஆற்றல் வளர்க்க விரும்பு!” எனும் நிகழ்ச்சி நடைபெற்றது. சிறந்த எழுத்தாளரும் தன்முனைப்பு பேச்சாளருமான முனைவர் வெ. இறையன்பு ஆற்றல் வளர்க்கும் வழிகளை கருப்பொருளாகக்  கொண்டு சிறப்புரையாற்றினார்.  ஜூரோங் குழுத்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் டான் வு மெங் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார். […]

கோவில்பட்டி

கோவில்பட்டியில் உலக புத்தக தினம் கொண்டாட்டம்

இந்திய கலாச்சார நட்புறவுக்கழகத்தின் சார்பாக கோவில்பட்டியில் உலக புத்தக தினம் நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இந்திய கலாச்சார நட்புறவுக்கழக மாநில செயலாளர் க.தமிழரசன் தலைமை தாங்கினார். மாநில குழு உறுப்பினர் வழக்கறிஞர் ஜெய்ஸ்ரீ கிறிஸ்டோபர் முன்னிலை வகித்தார்.  உலக புத்தகதினம் குறித்தும், புத்தக வாசிப்பை இயக்கமாக கொண்டு செல்ல வேண்டும் என வலியுறுத்தி உலக திருக்குறள் கூட்டமைப்பின் மாநில துணை தலைவர் க.கருத்தப்பாண்டி சிறப்புரை ஆற்றினார்.    நிகழ்ச்சியில் கருத்துரிமை பாதுகாப்பு கூட்டமைப்பு செயலாளர் வழக்கறிஞர் பெஞ்சமின் பிராங்கிளின், பொருளாளர் […]

கோவில்பட்டி

ஏஐடியுசி சுமைதூக்கும் தொழிலாளர் சங்கம் புதிய கிளை தொடக்க விழா

கோவில்பட்டி இளையரசேனந்தல் ரோடு ஏஐ டி யு சி சுமைதூக்கும் ஏற்றுமதி இறக்குமதி தொழிலாளர் சங்கம் புதிய கிளை தொடக்க விழா கூட்டம் ஏஐடியூசி மாவட்ட செயலாளர் பாபு தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் ஏஐடியூசி மாவட்ட தலைவர் பரமராஜ்,இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி நகரச்செயலாளர் சரோஜா,நகர துணைச்செயலாளர் முனியசாமி ஆகியோர் சங்கத்தின் செயல்பாடுகள் பற்றி பேசினார்கள். ஏஐடியுசி சுமைதூக்கும் ஏற்றுமதி இறக்குமதி தொழிலாளர் சங்கத்தின் புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்படடனர். சங்க தலைவராக வள்ளிராஜ், செயலாளராக முனியசாமி, பொருளாளராக […]

செய்திகள்

பூமி பாதுகாப்பு தினத்தில் மரக்கன்றுகள் நடும்பணி 

   மதர் சமூக சேவை நிறுவனம் ஆண்டு தோறும் பூமி பாதுகாப்பு தினத்தில்  விழிப்புணர்வு ஏற்படுத்தி மரக்கன்றுகள் நடும் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். அதன் தொடர்ச்சியாக இந்த ஆண்டு ஏப்ரல் 22 ஆம் தேதி(இன்று )  பூமி பாதுகாப்பு தினத்தை முன்னிட்டு    காயல்பட்டினம் நகராட்சி அலுவலக வளாகத்தில் மரக்கன்றுகள் நடும் பணி நடைபெற்றது.  நிகழ்ச்சிக்கு  மதர் சமூக சேவை நிறுவன இயக்குனர் டாக்டர் எஸ் ஜே கென்னடி தலைமை தாங்கினார்.காயல்பட்டிணம் நகராட்சி சுகாதார ஆய்வாளர்  ப. கைலாச […]

கோவில்பட்டி

கோவில்பட்டி சொர்ணா தொழில் பயிற்சி நிறுவன மாணவர்களுக்கு பணிநியமன ஆணை 

கோவில்பட்டி சொர்ணா தொழில் பயிற்சி நிறுவனத்தில் எலக்ட்ரீசியன், ஆட்டோமொபைல்,ஏசி மெக்கானிக் உள்ளிட்ட தொழில் பிரிவுகளில் பயிற்சி பெற்ற மாணவர்களுக்கு தமிழக அரசின் திறன் மேம்பாட்டு பயிற்சி திட்டத்தின் கீழ் கூடுதல் பயிற்சி வழங்கப்பட்டு அதில் 29 மாணவர்களுக்கு தனியார் நிறுவனத்தில் பணிபுரிய பணி நியமன ஆணை வழங்கப்பட்டது. பயிற்சி நிறுவனத்தில் நடந்த இந்த நிகழ்ச்சிக்கு தாளாளர் ஜெபின் ஜோஸ் தலைமை தாங்கினார். பயிற்சி நிறுவன  முதல்வர் சாந்தி பிரியா, ரோட்டரி சங்க உறுப்பினர் முத்து முருகன் ஆகியோர் […]

செய்திகள்

முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரின் ஒரு கோடி  ரூபாய் சவால்

தென் சென்னை தொகுதியில் போட்டியிட்ட உங்கள் மகனுக்கு ஆதரவாக நீங்கள் ஏன் பிரசாரம் செய்யவில்லை என்று முன்னாள் அமைச்சரும் அதிமுக அமைப்பு செயலாளருமான டி. ஜெயக்குமாரிடம் கேட்ட கேள்விக்கு பதில் அளித்து அவர் கூறியதாவது :- ஜெயவர்த்தனுக்கு  தனிப்பட்ட ஆற்றல் இருக்கிறது. அறிவு உள்ளது எதையும் எதிர்கொள்ளும் தைரியமும் துணிச்சலும் உள்ளது என் பையனை அருகில் வைத்துக் கொண்டே அவரைப் பற்றி நான் பெருமை பேச முடியாது…  ஜெயவர்த்தன் தனித்தன்மையோடு தேர்தலை எதிர் கொள்வார் எனவே அவருடன் […]

கோவில்பட்டி

முண்டு வத்தல் தரம் பிரிக்கும் விவசாயிகள்; போதிய விளைச்சல் இல்லாததால் கவலை 

 தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த புரட்டாசி மாதம் ராபி பருவத்தில் உளுந்து, பாசி, மக்கா, கம்பு, வெள்ளைச்சோளம், பருத்தி, மிளகாய், வெங்காயம், கொத்த மல்லி போன்றவைகள் விதைப்பு செய்தனர். இங்கு பெரும்பாலும், மானாவாரி விவசாய நிலங்களாகும், கடந்த டிசம்பர் மாதம் 16, 17 ஆகிய தேதிகளில் பெருமழை பெய்துபயிர்கள் கடும் சேதம் ஏற்பட்டது.இதனால் மகசூல் முற்றிலும் பாதிக்கப்பட்டது.  கடந்த 3 ஆண்டுகளாக தொடர்ந்து இயற்கை இடர்பாடால் பாதிக்கப்பட்டு விவசாயிகள் நஷ்டமடைந்து வந்தனர். பருத்தி மற்றும் மிளகாய் பழம் மகசூல் […]

கோவில்பட்டி

கோவில்பட்டியில் இலவச ஆக்கி பயிற்சி முகாம் தொடங்கியது 

கோவில்பட்டி ராஜீவ் காந்தி விளையாட்டு கழகத்தின் சார்பாக கோடைகால ஆக்கி பயிற்சி முகாம் இன்று தொடங்கியது. தொடக்க நிகழ்ச்சியில் இந்திய ஆக்கி வீரர் மாரீஸ்வரன் சக்திவேல் கலந்துகொண்டு பயிற்சி முகாமை தொடக்கி வைத்தார்.  மொத்தம் 40 பள்ளி மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.  தொடர்ந்து 27 ஆண்டுகளாக ராஜீவ் காந்தி விளையாட்டு கழகம்  கோடை காலங்களில் இலவச ஆக்கி பயிற்சி முகாம் நடத்தி வருகிறது. 14 நாட்கள் பயிற்சி முகாம் நடைபெறும்  அனுபவமுள்ள மூத்த வீரர்கள் பயிற்சி […]

கோவில்பட்டி

கோவில்பட்டியில் வாக்களிக்க சென்றவரை இறந்து விட்டதாக கூறிய அதிகாரி – திடீர் பரபரப்பு 

கோவில்பட்டி சிந்தாமணி நகர் பகுதியை சேர்ந்தவர் மருதப்பன்(வயது 70). இவர்  திருமண மண்டபத்தில் காவலாளியாக பணியாற்றி வருகிறார். இவர் இன்று  புதுக்கிராமத்தில் உள்ள 192வது நம்பர் வாக்கு சாவடி மையத்தில் அரசு கொடுத்த பூத் சிலிப் கொண்டு வந்து கொடுத்து தனது வாக்கினை செலுத்த சென்றார்.  அங்கிருந்த தேர்தல் அதிகாரி ஆவணங்களை பார்த்து விட்டு நீங்கள் நீங்கள் இறந்து விட்டதாக வாக்காளர் பட்டியலில் உள்ளது. எனவே நீங்கள் வாக்களிக்க முடியாது என்று தெரிவித்துள்ளார்.  இதனால் அதிர்ச்சி அடைந்த […]