• May 2, 2024

கனிமொழி, சென்னையில் ஓட்டு போட்டார் 

 கனிமொழி, சென்னையில் ஓட்டு போட்டார் 

சென்னை மயிலாப்பூரில் உள்ள வாக்குச்சாவடியில் திமுக துணைப் பொதுச் செயலாளரும், தூத்துக்குடி நாடாளுமன்றத் தொகுதி திமுக வேட்பாளருமான கனிமொழி , அவரது தாயார் ராஜாத்தி அம்மாளுடன் வந்து வாக்களித்தார். 

அப்போது கனிமொழியுடன் வாக்காளர்கள் பலரும் புகைப்படம் எடுத்தும் செல்பி எடுத்தும் மகிழ்ந்தனர். 

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கனிமொழிகூறியதாவது :-

இது நாட்டை காப்பாற்ற வேண்டிய தேர்தல், ஜனநாயகத்தை காப்பாற்ற வேண்டிய, அரசியல் சட்டத்தை காப்பாற்ற வேண்டிய தேர்தல். எனவே,  அனைவரும் சிந்தித்து வாக்களிக்க வேண்டும். அந்தத் தெளிவுடன், உணர்வுடன் வாக்களிக்க வேண்டும். தமிழ்நாடு, புதுச்சேரி 40 தொகுதிகளிலும் இந்தியா கூட்டணி நிச்சயம் வெற்றி பெறும்.

இவ்வாறு கனிமொழி கூறினார்.

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *