• May 4, 2024

கோவில்பட்டி சொர்ணா தொழில் பயிற்சி நிறுவன மாணவர்களுக்கு பணிநியமன ஆணை 

 கோவில்பட்டி சொர்ணா தொழில் பயிற்சி நிறுவன மாணவர்களுக்கு பணிநியமன ஆணை 

கோவில்பட்டி சொர்ணா தொழில் பயிற்சி நிறுவனத்தில் எலக்ட்ரீசியன், ஆட்டோமொபைல்,ஏசி மெக்கானிக் உள்ளிட்ட தொழில் பிரிவுகளில் பயிற்சி பெற்ற மாணவர்களுக்கு தமிழக அரசின் திறன் மேம்பாட்டு பயிற்சி திட்டத்தின் கீழ் கூடுதல் பயிற்சி வழங்கப்பட்டு அதில் 29 மாணவர்களுக்கு தனியார் நிறுவனத்தில் பணிபுரிய பணி நியமன ஆணை வழங்கப்பட்டது.

பயிற்சி நிறுவனத்தில் நடந்த இந்த நிகழ்ச்சிக்கு தாளாளர் ஜெபின் ஜோஸ் தலைமை தாங்கினார்.

பயிற்சி நிறுவன  முதல்வர் சாந்தி பிரியா, ரோட்டரி சங்க உறுப்பினர் முத்து முருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.தொழிற்பயிற்சி ஆசிரியர் அமல்ராஜ் அனைவரையும் வரவேற்றார் .

ரோட்டரி மாவட்ட முன்னாள் துணை ஆளுநர் ஆசியாபார்ம்ஸ் பாபு சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு 29 மாணவர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார். ஆசிரியர் பாலமுருகன் நன்றி கூறினார்.நிகழ்ச்சியில் தொழில் பயிற்சி மாணவர்கள், பெற்றோர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *